Monday, February 14, 2011






Prepare to be redirected!

This page is a time delay redirect, please update your bookmarks to our new
location!




பா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முன்னாள் அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன்

2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச் சர் அருண்ஷோரிக்கு, பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சி.பி.அய். சம்மன் அனுப்பி உள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட் டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது.

இந்தப் பிரச்சினை யில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முழுமையாக முடக்கின. இந்த புகா ரின் பேரில் கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன் றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சி.பி.அய். யும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

தொலைத் தொடர் புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, டி.பி.ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா மற்றும் தொலை தொடர்புத் துறை உயர் அதிகாரிகள் சிலரை சி.பி.அய். கைது செய்து விசாரணை நடத்தியது. ஆ. இராசாவும், பல்வா வும் தொடர்ந்து சி.பி. அய். காவலில் எடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் அமைக் கப்பட்ட விசாரணை ஆணையம் அறிக்கை யில், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் வெளிப்படையான முடிவு எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாற்றப்பட்டு இருந்தது.

சிக்குகிறது பா.ஜ.க.,

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற தவறான கொள்கை அறி முகப்படுத்தப்பட்டதற்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றும் அதில் குறிப் பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் 2ஜி அலைக் கற்றை பிரச்சினையில் 2001ஆம் ஆண்டில் இருந்தே விசாரணை நடத்தும்படி உத்தர விட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, வாஜ்பேயி தலைமை யிலான பா.ஜனதா கூட் டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வகித்த அருண்ஷோரி யிடம் விசாரணை நடத்த சி.பி.அய். முடிவு செய்தது.

அதன்படி ஸ்பெக்ட் ரம் முறைகேடு புகார் பற்றி விசாரணை நடத் துவதற்காக பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜ ராகும்படி அருண் ஷாரிக்கு, சி.பி.அய். சம் மன் அனுப்பி உள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த அருண்ஷோரி, விசாரணையின்போது சில முக்கிய ஆவணங் களை சி.பி.அய்.யிடம் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

50 உரிமங்கள் மறைந்த பிரமோத் மகா ஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் தொலை தொடர்புத் துறை அமைச்சர்களாக பதவி வகித்தபோது நடை பெற்ற கூட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் குறித்தும் சி.பி.அய் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு மாறாக, பார்தி, வோட போன், அய்டியா போன்ற நிறுவனங்களுக்கு 50 உரிமங்கள் வரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறு வனங்களுக்கு வழங்கப் பட்ட உரிமம் தொடர் பான ஆவணங்கள் குறித் தும் விசாரணை நடத் தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் பயன் அடைந்தவர்கள் பற்றி யும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தின் புதிய உத்தரவுப்படி தனது விசாரணை வளை யத்தை சி.பி.அய். மேலும் விரிவுபடுத்தி யுள்ளது. தொழில் அதிபர் அனில் அம்பானியின் ஏ.டி.ஏ.ஜி. குழுமம் உள்பட பல் வேறு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வரு கிறது.

அனில் அம்பானி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு இது தொடர்பாக சம் மன் அனுப்பப்பட்டு உள்ளது. எங்கள் விசா ரணையின் ஒரு கட்ட மாக பல்வேறு அதிகா ரிகளை விசாரணைக்கு அழைத்து இருப்பதாக சி.பி.அய். செய்தித் தொடர்பாளர் வினிதா தாகூர் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கடந்த வாரத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அருண்ஷோரி, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பிரதமர் மன் மோகன்சிங்கை சந்தித்து ஆரம்பத்திலேயே எச்ச ரித்ததாகவும், ஆனால் பிரதமர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்றும் புகார் கூறி இருந்தார்.

பா.ஜ.க.மீதும் குற்றச்சாற்று

அதேபோல் பா. ஜனதா தலைவர்களும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக் கடி கொடுக்கத் தவறி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாற்ற இருந் தார்.

அருண்ஷோரிக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கருத் துத் தெரிவித்த பா. ஜனதா செய்தித் தொடர் பாளர், பா.ஜன தாவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ப தால் எந்த விசாரணை யையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த 2007ஆம் ஆண் டிலேயே பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் இந்த முறைகேடு பற்றி தெரிவித்ததாகவும், அதற்கு அந்த தலை வர்கள் அமைதி காத்த தாகவும் அருண்ஷோரி குறிப்பிட்டு இருந்ததை அவர் நிராகரித்தார்.
http://viduthalai.in/new/e-paper/3405.html 

Sunday, February 13, 2011

நான்தான் அண்ணா பேசுகிறேன்

(அறிஞர் அண்ணா அவர்கள் இன்று இருந்தால் என்ன பேசுவார்?)
அறிஞர் அண்ணா

என் பெயரால் ஒரு கட்சி -அண்ணா திமுக; என் உருவம் தாங்கிய கொடி -அ.இ.அ.தி. மு.க. கொடி; அதற்கென்று ஒரு பத்திரிகை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை கண்டு திடுக்கிட்டுப் போனேன். மண் சோறு சாப்பிட்டீர்கள். மாள முடியாத பசி போலும் என்று நினைத்தேன். யாகம் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். தோட்டத்துக்குள்தானே  தனி நபர் பிரச்னை என்று தள்ளி விட்டேன்.

சித்ரா பவுர்ணமியன்று வீட்டில் விளக் கேற்றி இருளை விரட்டுங்கள் என்று வெளி வந்த ஓர் அறிக்கையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன்.

விநாயக சதுர்த்திற்கு வாழ்த்துத் தெரி வித்தாய்; நான் எழுதிய களி மண்ணும் கையுமாக (திராவிட நாடு 12.9.1942) என்ற கட்டுரையைப் படிந்திருந்தால் அல்லவா - இந்த வாழ்த்தை எழுதும்போது தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக எத்தனை எத்தனைக் கூட்டங்களில் பேசி இருப்பேன், எத்தனை எத்தனை கட்டுரைகளை எழுதித் தள்ளியிருப்பேன்! - மாநாடுகள் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பேன், பேரணி களை நடத்தியிருப்பேன் - போராட்டங்களை நடத்தியிருப்பேன்!

அந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்ற என் பெயரை வைத்துக் கொண்ட கட்சியின் பொதுச் செய லாளர் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கு கிறார் என்றால் தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டியவன் ஆனேன். ராமர் பாலமாம். அதை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படுமாம். அட தங்கச்சி! என் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டா இந்த மோசடியைச் செய்ய வேண்டும்?

இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியாரும், நானும் எழுதியதை, பேசியதைப் படித்து பார்த்ததுண்டா, அந்த நூல்களைக் கையால் தொட்டதுதான் உண்டா?

இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் இராமாயணத்தைக் கொளுத்துவது குறித்து நான் விவாதம் செய்த வரலாறு உமக்குத் தெரியுமா? நீதிதேவன் மயக்கம் கேள்விப்பட்டதுண்டா?

வரலாறு தெரிந்தவர்கள் யாராவது உமது பக்கத்தில் வைத்துக் கொண்டதுண்டா?

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்பதுபற்றியெல்லாம் ஏதாவது தெரியுமா?

உமக்கு எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நீ ஆரியத்தின் பக்கத்தில்தானே நிற்பாய்? அந்த அடிப்படையில் தான் இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பாயோ?

தங்கச்சி, உன் அறிக்கை ஒன்றை உமது கட்சி ஏட்டில் (29.10.2009 _ நமது எம்.ஜி.ஆர். பக்கம் 1-9) படித்துப் பார்த்தேன்.

ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ராமர் பிறந்தார். ராமரின் பிறவிப் பயன் என்ன? தீய சக்தியான ராவணனை அழிப்பது தான். ராமனின் பிறவிப் பயன் கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணனுடைய பிறவிப் பயன் என்ன? கம்சன் என்னும் அரக்கனை ஒழிப்பது தான் அழிப்பதுதான். கிருஷ்ணரின் பிறவிப் பயன். சத்ய பாமாவின் பிறவிப் பயன். என்ன? நரகாசுரனை வதம் செய்வதுதான் சத்ய பாமாவின் பிறவிப்பயன் அதைப்போலவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறவிப் பயன் என்ன? கருணாநிதி என்னும் தீய சக்தியை அழிப்பதும், ஒழிப்பதும்தான் அண்ணா தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று அந்த அறிக்கையைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

திராவிடர் இயக்கத்தின் ஆணி வேரை வெட்டுவதுபோன்ற வெட்டரி வாள் வீச்சு இது!

அசுரன் என்றும், அரக்கன் என்றும் புராணங்களில், இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பது எல்லாம் திராவிடர் கள் அதில் கூறப்பட்டிருப்பது எல்லாம் ஆரியர் -திராவிடர் போரே!

என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிநாதம். வரலாற்று உண்மையும்கூட!

இதன் ஆரம்ப எழுத்தைக் கூடப் புரியாத ஒரு சீமாட்டி என் பெயரையும் திராவிட என்ற வரலாற்றுப் பெயரையும் தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதால் ஏற்பட்ட விபரீதம்! விபரீதம்!!

புத்தர் இயக்கத்தில் புகுந்து ஊடுருவி ஆரியம் நாசப்படுத்தியதுபற்றி நான் எழுதாததா? பேசாததா? தந்தை பெரியார் கூறாததா?

இப்படியெல்லாம் சொன்ன இயக்கத்திலேயே ஆரியம் புகுந்து தன் விஷம வேலையைச் செய்து விட்டதே என்று எண்ணுகிறபோது, எதையும் தாங்கும் இதயம் படைத்த எனக்கே நெஞ்சம் வெடித்து விடும் போலி ருக்கிறதே!

இதனை ஏற்றுக்கொண்டு உம் கட்சியில் எப்படியிருக்கிறார்கள்? கொள்கை பற்றித் தெரியாத கூட்டம் உமது பின்னால் நிற்கிறது; - பதவி என்ற தீனியைப் போட்டால் போதும் புரட்சித் தலைவியே! என்று போர்ப் பாட்டுப் பாடுவார்கள் போலும்!

இந்த ஒரே ஒரு அறிக்கை ஒன்று போதும்  நீவிர் யார் என்பதற்கு!

இராமன் பக்கமும் கிருஷ்ணன் பக்கமும் நின்று திராவிடர்களை சூத் திரர்களை வீழ்த்துவதற்குப் புறப்பட்ட அணிக்குத் தலைமை தாங்குகிறாய்.

அதனால்தானே சோ இராம சாமிகளும், குருமூர்த்திகளும், தின மணிகளும் தினமலர்களும் கல்கி களும், இந்துக்களும் உம் தலைமையை ஏற்று அணிவகுத்து நிற்கின்றன.

ஆரிய வெறியின் சனாதனத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்திலே கட்சியை நகர்த்திச் சென்று விட்டாய், மிகவும் வெளிப்படையாக ஆரிய தி.மு.க.வாக மாற்றி விட்டாய் என்பதற்கு அடையாளமாக உமது ஏட்டில் நாள்தோறும் ராசிபலன் வெளியிட ஆரம்பித்து விட்டாய்.

இது ஓர் உச்சக் கட்டமான முடிவு; கட்சியில் இனி தட்டிக் கேட்க யாரா லும் முடியாது என்பதற்கான அறிவிப் பாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

அப்பட்டமாக அண்ணா தி.மு.க. ஆரிய மயமாகி விட்டது என்பதற்கான பிரகடனமாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

பார்ப்பனர்களையல்ல பார்ப்பனீ யத்தை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்தது உண்மை தான். உம்மைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. பார்ப் பனராகவும் பார்ப்பனீயத்தை திராவிட இயக்கத்தில் திணிக்கும் பேர் வழியாக வும் நீர் ஆகிவிட்டாய். திராவிட இயக் கத்துக்கு இப்படி ஒரு விபத்தா? இது சூத்திரர்களின் அரசு? என்று என் தம்பி கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அவரை ஒழிப்பதுதான் அ.தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாய். அதற்கொப்ப இராமாயணத்தையும் துணைக் கழைத்து விட்டாய்; ஆரியர் -திராவிடர் போராட்டம்தான் அரசிய லாக நடக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ மான அப்பட்டமான அறிவிப்பு உமது வாயாலேயே வெளிவந்துவிட்டது!

மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களாக! ஆரியத் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை மோசடியை எதிர்த்து, கொள்கை ரீதியில் வினா தொடுக்க அ.இ.அ.தி.மு.க. வில் ஒரே ஒரு தொண்டன்கூட இல் லாது போய் விட்டாரா என்ற கேள்வி யோடு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்

(அண்ணா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தானே பேசி இருப்பார்?).

இணைப்பு I

சோதிடப் பரீட்சை தாசரதி

தியாகராசனும், வேணுவும் பச்சையப் பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகு நாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இரு வரும் மிகுந்த நட்புக் கொண்டிருந் தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்து வானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்ராய பேதமிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத் தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும் என்றறிந்த தியாகராசன் இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான்.அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

நாரதபுரம்
நவீன சோதிட சாத்திரியார்
எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு.
எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின்
பெயரையாவது குறிக்கவும்

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு;

அய்யா, கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவு செய்து விடைகளைத் தெரி விக்கவும்.
1. என் தாயார் உடம்பு சீக்கிரம் குணமாகுமா?

2. என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?

3. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

புஷ்பம் -கனகாம்பரம்

தங்களன்புள்ள,
தியாகராசன்

இதை உடனே தபாலில் சேர்த்து விட் டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரி யார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரியாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்ததாவது:

உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன்; அவர் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்து தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? தியாகுவின் தாயார் இறந்து அனேக வருடங்களாயின. வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரி யாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

- அறிஞர் அண்ணா (திராவிட நாடு)

ராசிபலன் போடும் நமது எம்.ஜி.ஆர். சிந்தனைக்ககாக இது

இணைப்பு II

இராமன் - இராமாயணம்பற்றி அறிஞர் அண்ணா

இராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரேயொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர், - மதிப்பர், - வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத் தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.

திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமில்லை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோமில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாது உண்மையாகி விட்டது.

இராவண காவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது இராவ ணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க.

இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், - ஆரிய நேசர்கட்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை. அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்து விடுவதுதான், வேறு மார்க்கம் இல்லை. - - அறிஞர் அண்ணா.
நூல்: புலவர் குழந்தையின் இராவண காவியம் முன்னுரையாக அண்ணா எழுதி யது இது.

இராமாயணம், இராமன் எல்லாம் கற் பனையே என்றும், ஆரியர் - திராவிடர் பிரச்சினை என்றும் இவ்வளவு தெளிவாக அறிஞர் அண்ணா எழுத்துருவில் கல்வெட் டாகச் செதுக்கியுள்ளாரே, அண்ணா பெய ரால் கட்சி நடத்துபவரின் பதில் என்ன?


நீங்கள் ஆரியரா? ஆரியதாசரா? திராவிடரா?


அ.இ.அ.தி.மு.க. தோழனின் பதில் என்ன?

நான்தான் அண்ணா பேசுகிறேன் 

சு.சாமியே, ஓடாதே, நில்-4


எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறுமாப்புடன் பேசும் சு.சாமியின் கீழ்த்தரப்பட்ட யோக்கியதாம்சம் எத்தகையது என்பதற்கு மேலே கண்ட எடுத்துக்காட்டுகள் போதாதா?

உண்மைகளை மறைக்கிறார். பதில் அளிக்காமல் பிடிவாதம் காட்டினார் என்று கமிஷன் கூறுகிறதே - இந்தப் பேர் வழி ஒரு நாணயமான மனுசனாக இருந்திருந்தால் உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும் - பிடிவாதமாகப் பதில் சொல்ல ஏன் மறுக்க வேண்டும்? - பதுங்க வேண்டும்?

வீராதி வீரர்போல அரட்டைக் கச்சேரி நடத்துகிறாரே - கமிஷன் கேட்ட கேள்விக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் ஏன் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார வேண்டும்? விழி பிதுங்கி ஏன் திணற வேண்டும்? கவட்டிக்குள் ஏன் கவிழ்ந்து படுக்க வேண்டும்?

குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் கூனிக் குறுகத்தானே வேண்டும்? வெல வெலத்துத்தானே போக வேண்டும்? - முகம் வெளிரத்தானே செய்யும்!

நியாயமாக உண்மைகளைச் சொல்லத் தவறிய காரணத்தால் - மறைத்த காரணத்தால் உள்ளே தள்ளப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு நாள் ஜெயிலில் இருந்திருந்தால் இந்தக் கோழையின் குணாதிசயங்கள் வெளிப்பட்டிருக்கும். மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அப்ரூவராக ஆசாமி மாறியிருப்பார். என்ன காரணத்தாலோ, எந்தப் பூணூல் பாசத்தாலோ, நிருவாக அமைப்பில் உள்ள பஞ்சக் கச்சங்களின் பரிவாலோ ஒவ்வொரு சமயமும் இந்த ஆள் தப்பித்துக் கொண்டு வருகிறார்.

சு.சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளராக இருந்த தோழர் வேலுச்சாமி இந்தச் சு.சாமியைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?

கூடவே இருந்தவராயிற்றே! அகம் - புறம் அறிந்தவராயிற்றே! சும்மா சூடு பிறக்கிறது வேலுச்சாமியிடமிருந்து! - அதையும் நாளை தெரிந்து கொள்ள வேண்டாமா?
http://viduthalai.in/new/page-8/3368.html 

Saturday, February 12, 2011

டார்வின்

அறிவியல் உலகத்தில் மகத்தான கண்டுபிடிப்பு என்பது - விஞ்ஞானி சார்லஸ் டார்வி னின் பரிணாமக் கொள்கை யாகும். அதுவரை மதம் நம்பி வந்த, கற்பித்துவந்த கடவுள் படைப்புக் கொள்கைக்கு மரண அடி கொடுத்த அந்த மாமனிதர் பிறந்த நாள்தான் இன்று (1809).

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். விலங் கியல், தாவரவியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். கப்பலிலேயே சுற்றிச் சுற்றி பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்று ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.

1859-இல் அவரால் எழுதப் பட்ட உயிரினங்களின் தோற் றம் (Origin of species) எனும் நூலும், 1871 இல் அவரால் எழுதப்பட்ட மனிதனுடைய பாரம்பரியம் (The Descent of Man) எனும் நூலும் மனித சமுதாய வளர்ச்சித் திசையில் மிகப் பெரிய திருப்பத்தைத் தந்த அரிய அறிவுக் கருவூலங்கள் ஆகும்.

இயற்கையானது, எந்த உயிர் தன் சூழ்நிலையில் வாழ் வதற்கு மிகவும் அனுகூலமான மாறுபாடுகளை உடையதோ, அந்த உயிரைத் தேர்வு செய்து கொள்கிறது. இத்தகு இயற் கைத் தேர்வு தொடர்ச்சியாகவும், வழி வழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அந்த அளவுக்கு வேறுபட்ட விலங் கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று டார்வின் தம் கண்டுபிடிப்பாகக் கூறினார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது இதுதான். குரங்கிலிருந்து படிப் படியாக மனிதன் உருவானான் என்பது அவர்தம் ஆய்வின் முடிவு.

தன்னைப் போலவே தேவன் மனிதனைப் படைத்தான் என்ற பைபிள் மொழிக்கு இது விரோதமாக இருக்கிறதே என்று உலகம் ஆத்திரப்பட்டது. கடவுளை மறுக்க வந்த சூழ்ச்சி, மனிதனின் ஆபாசமும், நஞ்சும் பொருந்திய துர்க்காற்று என்று தூற்றினர். இவர்கள் நரகத் துக்குத்தான் போவார்கள் என்று மண்ணை வாரி இறைத்தனர்.

டார்வின் கண்டுபிடிப்பு சரியானதே என்று சொன்ன தற்காக அமெரிக்காவின் கொலம்பியா மதக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உட்ரோ வேலையி லிருந்து தூக்கியெறியப்பட்டார் (1884).

1925 ஆம் ஆண்டில் கூட அமெரிக்காவின் தென்னசி மாநிலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கற்பித்ததற்காக ஸ்கோபஸ் என்னும் ஆசிரியர் நீதி மன்றத் தின் கூண்டிலே நிறுத்தப் பட்டதுண்டு.

1950 ஆம் ஆண்டில்கூட 12ஆம் போப் பயஸ் பரிணாமக் கொள்கையை பயங்கரமாக எதிர்த்தார்.

என்ன அதிசயம்! 1996 இல் ஓர் அதிசயம் நடந்தது. போப் ஜான் பால் டார்வினின் தத்து வம் சரியானதே - ஏற்றுக் கொள் ளத் தக்கதே என்ற அணு குண்டைத் தூக்கிப் போட்டாரே பார்க்கலாம்.

ஃபோன்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப் புக்கு அனுப்பியுள்ள செய்தியில், புதிய அறிவு பரிணாம வளர்ச் சித் தத்துவத்தினை அங்கீ கரிக்கச் செய்கிறது. பரிணாமக் கொள்கையை பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்றாரே பார்க்கலாம் The Hindu 26-10-1996)

போப் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் என்றால் இங்கிலாந்தைத் தலைமை இடமாகக் கொண்ட புரொட் டஸ்டண்ட் கிறித்துவப் பிரிவி னரின் தலைவரான ரைட் ரெவரெண்ட் டாக்டர் மால்கம் பிரவுனும் டார்வின் கொள் கையை எதிர்த்ததற்காக 126 ஆண்டுகளுக்குப் பின் மன்னிப் புக் கோரியுள்ளார்.

(இணைய தளச் செய்தி 15-9-2008).

அறிவியலா - மதமா? ஆம், அறிவியல், மதத்தை மண் கவ்வச் செய்துவிட்டது! வாழ்க டார்வின்!

- மயிலாடன்

http://viduthalai.in/new/page1/3304.html

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண் டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.

சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

http://viduthalai.in/new/page-2/3311.html 

சு.சாமியே, ஓடாதே, நில்! -3

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய சு.சாமியின் உள்ளி மூக்கை உடைத்தது ஜெயின் கமிஷன் என்றால், மூக்கையே முழுவதும் வெட்டி முடித்தது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (10.10.2000)


எல்லாரிடத்திலும் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்த மனிதரின் ஆட்டபாட்டம் திராவிடர் கழகத்திடம் எடுபடவில்லை.

அந்த அறிக்கையிலே சு.சாமியின் அஸ்திவாரத்தையே நொறுக்கித் தள்ளி னார். அதில் ஒரு பகுதி இதோ:

ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை மீது மத்திய அரசு மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கைபற்றிய ஓர் அறிக்கையில், இந்த யோக்கியர் சுப்பிரமணிய சுவாமியின் பங்கு ராஜீவ் காந்தி கொலையில் என்னவென்பது பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறது என் பதை நாடு மறந்து விடுமா? நல்லவர்கள் மறந்து விடுவார்கள் என்பது இவரது நினைப்போ? 6 மாதங்களில் 8 முறை விசாரிப்பட்டவர் சு.சுவாமி (20-3-1995. 27-9-1995)

Memorandum of Action on the Final Report of Jain Commission of inquiry.

பக்கம் 17, 31 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கிறது - மத்திய அரசின் உள்துறை? இவரது குருஜி சந்திராசாமி, (அவரது டிரஸ்டில் இடம் பெற்றிருந்த டிரஸ்டிகளில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி) பற்றி என்ன கூறியிருக்கிறது?

பக்கம் 16 மற்றும் பக்கங்கள் 26,27,28,29,30,31 Taking the entire evidence, material and circumstances brought on record into consideration, a doubt does arise regarding chanrdaswami’s complicity and involvement. so the matter requires further probe. Para 3, Page 232, vol iii) மற்றும் இந்த ATR இல் உள்ளவற்றை அப்படியே தருகிறோம். அதன் தமிழாக் கத்துடன் (தனியே இணைக்கப்பட் டுள்ளது. அது சுப்பிரமணிய சுவாமியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும்; நாளை வெளி வரும்)

இதன்படி பார்த்தால் ஜெயின் கமிஷன் பரிந்துரைகளை ஆராய்ந்தபின் மத்திய அரசு ((The Multi Disciplinary Monitoring agency) சுப்பிரமணிய சுவாமி பங்கு பற்றி மேலும் விசாரிக்கச் சொல்லித்தான் ஆணையிட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தைப் பற்றியோ, வீரமணி பற்றியோ அல்ல.

அது மட்டுமா?

ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அவர் பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி மறைத்தமைக் காகவும், பொய்யான கருத்துகளையும் இட்டுக்கட்டி கூறியதற்காகவும் இந்திய குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) IPC section 179,193 ஆகியவைகளின் படி அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. வழக்கு நடந்து, இதன்படி சரியான தீர்ப்புக் கிடைத் தால் இவர் பத்தரை ஆண்டு தண்டனை யும், அபராதமும் செலுத்தி ஜெயிலில் தள்ளப்பட வேண்டிய நபர் ஆவார்.

1. இவரது கட்சியில் பொறுப்பில் இருந்தவரே இவரைப்பற்றிய சந்தேகம் கிளப்பி, இவரை அவரது வழக்கில் குறுக்கு விசாரணை ஜெயின் கமிஷனில் செய்தாரே அதற்கு விளக்கமான பதில் அளித்தாரா இவர்? (இதுபற்றிய தகவலும் வெளிவர உள்ளது)

2. அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ஆஜராகிய ஆர்.என்.மிட்டல் என்ற வழக்கறிஞர் கேள்விகளுக்கோ செல்வி ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேள்வி களுக்கோ இவர் ஒழுக்காகப் பதில் அளித்தாரா? திணறி, திக்குமுக்காடி உளறிக் கொட்டவில்லையா - இந்த உத்தமபுத்திரர்?

3. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தியா அப்ராட் (india Abroad - வாசிங்டன் நாள் 22.10.1990) என்ற ஏட்டிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் முதன் முதலாக இஸ்ரேலியர் களிடம் தொடர்பு கொண்டு, மொசாட் என்ற இராணுவ அமைப்பிடம் இராணு வப் பயிற்சி பெற - தான் உதவியதாக கூறியவர் இந்த சுப்பிரமணிய சுவாமி தான். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஏற்கெ னவே எல்.டி.டி.யிடம் அனுதாபம் காட்டி வந்ததாகவும், ஈழப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம் தன்னை (CIA) சி.அய்.ஏ. ஏஜென்ட் என்று கூறிய தால் புலிகள் ஆதரவை தான் விலக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஜெயின் கமிஷனில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி சுப்பிர மணிய சுவாமி பற்றி கமிஷனில் என்ன கூறினார்?

சுப்பிரமணிய சுவாமி நீண்ட கால விடுதலைப் புலிகளின் நண்பர். இந்தியா அப்ராட் பத்திரிகையின் செய்தியே அதற்குச் சான்று.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன் நண்பர்கள் ஊடுருவி இருப்பதாக சுவாமி கூறினார். நான் அடுத்தடுத்து குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ராஜீவ் காந்திக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் ராஜீவுக்கு வழங்க வேண்டும்; ஆனால் சுப்பிரமணிய சுவாமி அமைச்ச ராக இருந்த போது தக்க ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.

இந்தப் பாதுகாப்பை ராஜீவுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் பிரதமர் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். எனவே அவர்தான் இதற்குப் பொறுப்பு. கருணாநிதிக்கோ சுவாமியைப் போன்று பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. பிரதமர் ஆகும் தருணம் ராஜீவைவிட எனக்குத்தான் உண்டு என்று கூறியவரும் சாமிதான்.

இந்தியப் பிரதமராக சுப்பிரமணிய சுவாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார் என்று சுவாமியே கூறுகிறார். இப்படி ஒரு வியாதி நமது நாட்டுக்குத் தேவையா? 91 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அடுத்த பிரதமர் ராஜீவ்தான் என்பதை அனைவருமே பேசினர். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி பிரதமராக வேண்டும் எனில் என்ன செய்வார்? - என்று ராம்ஜெத்மலானி ஜெயின் கமிஷனிலேயே கூறினார்.

இவ்வாறு அறிக்கையின் மூலம் திராவிடர் கழகத்துடன் மோதிய சு.சாமி பார்ப்பானின் முகமூடியை உடைத்தெறிந் தார் தமிழர் தலைவர்.

அதற்குப் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை இந்தஆசாமி. இவரைப்பற்றி ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் என்ன? அதையும் அடுத்துத் தெரிந்து கொள்வோமே!
http://viduthalai.in/new/page-2/3313.html 

Friday, February 11, 2011

சு.சாமியே, ஓடாதே, நில்-2

முந்தைய பகுதி படிக்க தொடர்பு சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?
விகடகவி, அக்கப்போர் ஆசாமி, அகாசுகா ஆளு, டுப்பாக்கூர் பேர்வழி, கோமாளிராயன், விளம்பரப் பிரியன்-என்று நாட்டு மக்களால் பட்டம் சூட்டப்பட்ட அக்கிரகார அபிஷ்டுதான் இந்தச் சு.சாமி! கிறுக்கராக இருந்தாலும், அல்லது கிறுக்கர் போல பாவனை பண்ணினாலும் தான் ஓர் அக்கிரகார அம்பி என்பதில் மட்டும் கில்லாடிதான்!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா யிருக்கும் ஜாலக்காரர்தான்.

தமிழர்களில் முன்னணியாக இருக்கக் கூடியவர் மீது திடீரென்று வெடிகுண்டைத் தூக்கிப் போடுவார்.

செல்வாக்கானவர்கள் பற்றி விமர்சனம் செய்தால் செங்கல்லுக்குக்கூட விளம்பரம் கிடைக்குமே!. அந்தக் கலையைக் கற்ற கெட்டிக்காரர்!

தி.மு.க., - பா.ம.க., பிரச்சினை ஒரு புறமிருக்க, ராஜீவ் காந்தி படுகொலையில், வெளிநாட்டுச் சதிவலை தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.அய். யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளது.

இந்த கே.பத்மநாபன் வேறு யாருமல்ல; சர்வதேச நிதி நிருவாகப் பொறுப்பாளர். கே.பி. என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாத நபர்!

இப்படிப்பட்ட கே.பி.யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். தாய்லாந்து சென்று கே.பி.யை டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் சந்தித்துப் பேசினார்கள். ராமதாசையும், திருமாவள வனையும் சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்றார் சு.சாமி. ( குமுதம் ரிப்போர்ட்டர் 22-6-2008 - பக்கம் 10).

இதுபற்றி மானமிகு திருமாவளவனிடம் கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி ஓர் அகாசுகா பேர்வழி என்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக் கொள்கிறார் என்று முகத்தில் அறைந்தது போல பதில் கூறினார். அந்தத் தகவல் முற்றிலும் பொய் என்று முகத்திரையைக் கிழித்தார். (அதே குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்).

அதெல்லாம் எங்கே உறைக்கப் போகிறது உளுத்துப் போன பேர்வழிக்கு?

ஆதாயம் பெறுவதற்கு அவ்வப்போது சிலருக்கு வலையை வீசுவார் - அவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளுவார். அப்படித்தானே ஒருமுறை மதுரைத் தொகுதி எம்பியானார்.

திடீர்னு டீ பார்ட்டிக்கு அழைப்பார். அதில் கண்டிப்பாக வில்லங்கம் இருக்கும்.

அ.தி.மு.க.வின் ஆதரவோடு இரண்டாவது முறை யாகப் பிரதமராகியிருந்தார் வாஜ்பாய். அப்போது முன்னாள் கடற்படைத் தலைவர் விஷ்ணு பகவத் சுமத்திய குற்றச்சாற்றுகளின்படி, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டசை, இலாகா மாற்றம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார் ஜெயலலிதா.

ஆனால் அதற்கு வாஜ்பாய் செவிசாய்க்காததால், ஜெயலலிதா ஆதரவை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்திருந்தார். அப்பொழுதுதான் இந்த சு.சுவாமி குறுக்கே புகுந்து டீ பார்ட்டி நடத்தி அதில் பா.ஜ.க. அல்லாத தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த டீ பார்ட்டிக்குப் பிறகே வாஜ்பாய் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கினார். ஆட்சியும் கவிழ்ந்தது. அத்தனையும் சுவாமி புண்ணியம்.

உண்மையில் ஃபெர்னாண்டசை இலாகா மாற்றுவது மட்டுமே ஜெயலலிதாவின் கோரிக்கை அல்ல; மதுரை தொகுதி எம்.பி.யான சுவாமியை நிதியமைச்சராக்க வேண்டும் என்பதுதான். இது முழுமையாக நடக்கா விட்டாலும் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பரம திருப்தி!

(கல்கி 6-4-2008 பக்கம் 47)

எழுதி இருப்பது விடுதலை ஏடு அல்ல; முர சொலியும் அல்ல. நக்கீரனும் அல்ல. அவாள் ஆத்துக் கல்கிதான் இப்படி உண்மையைக் கக்கியுள்ளது.

பதவிக்காக எந்தப் பித்தலாட்டத்தையும் செய்ய கிஞ்சிற்றும் தயங்காத தரகர் என்பதை கல்கியே கணித்து விட்டதே. அதற்கு மேல் ஆதாரம் எதற்குக் குதம்பாய்? என்று பாடவேண்டியதுதான்.

மதுரைப் பதிப்பு தினத்தந்தியில் (8-10-2001) ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பெங்களூரில் அல்சூர் சென்னில்ஸ்ட்ன் சாலையில் நீச்சல் குளத்துடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடத்தை 1994 இல் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு சு.சுவாமி வாங்கியிருந்தார். அதனுடைய இப்போதைய (1996) மதிப்பு ரூ 60 லட்சம். ஆனால் ரூபாய் 14 லட்சம் 50 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார்.

பத்திரப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று அ.இ.அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி பெங்களூர் 10 ஆவது கூடுதல் மாஜிஸ்டிரேட் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாரே!

இதில் கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஒன்று அரங்கேறியிருக்கிறது - அதுதான் முக்கியம்.
இந்த வீட்டை வாங்கியவர் ஆலன் பிண்டோ. அவர் பெயரில்தான் விற்பனைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டது.

பிண்டோவுக்குக் குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அந்தக் குழந்தை சார்பிலும் முன் பணம் கொடுத்துள்ளதாக விற்பனைப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபார்ட்மென்டை பிரித்து விற்கப்பட முடியாத நிலையில் மூன்று பேருக்கு விற்றதாகக் குறைந்த மதிப்புகளைக் காட்டி அரசுக்குச் சேரவேண்டிய முத்திரைப் பணம் கிடைக்க விடாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்யப் பட்ட மூவரில் ஒருவர் யார் தெரியுமா? பிறக்காத - தாயின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு.

இப்படிப்பட்ட கில்லாடியை இதுவரை யாரும் கேள்விப்பட்டு இருக்கிறோமா?

இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடு மதுரைப் பதிப்பு தினத்தந்தியும் (8-10-2001) , தி. இந்து ஏடும் (7-10-2001)

முத்திரை ஸ்டாம்பு மோசடி, பிறக்காத பிள்ளைக்கு விற்றதாகப் பொய்த் தகவல் - இப்படிப்பட்ட மோசடி மஸ்தான்தான் மற்றவர்கள் ஊழல் செய்தார்கள் - லஞ்சம் வாங்கினார்கள் என்று கூரை ஏறிக் கொக்கரிக்கிறார்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களையும் சீண்டிப்பார்த்தார் - விளைவு முதுகுத் தோல் உரிந்தது தான் மிச்சம்.

இந்து ஏட்டில் (5-10-2000) சு.சுவாமியின் பேட்டி ஒன்று வெளிவந்தது. (சு.சுவாமி தும்மினாலும் முதல் பக்கத்தில் மூன்று பத்தியில் செய்தி போட அக்கிரகார ஏடுகள் முண்டியடித்துக் கொண்டு கிளம்பிவிடுமே!)

வீரமணி யாழ்ப்பாணம் போய் பிரபாகரனைச் சந்தித்ததாக வழக்கமாக அவர் பாணியிலே குண்டைத் தூக்கிப் போட்டார். பிரபாகரனைச் சந்தித்து இருந்தால், ஆமாம், சந்தித்தேன்; அதில் என்ன தப்பு? என்று கூறக் கூடியவர்தான் தமிழர் தலைவர். ஆனால் உண்மைக்கு மாறாக அவிழ்த்துவிட்ட அந்தக் கரடியின் மூக்கை உடைத்தது போல மறுத்து அறிக்கை வெளியிட்டார் (விடுதலை 10-10-2000)

அந்தப் பேட்டியில் அக்கப்போர் சாமி அதோடு நிறுத்திவிடவில்லை.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று கூசாமல் கூறினார்.

அதற்கும் ஆதாரப் பூர்வமாகப் பதில் அடி கொடுத்தார் ஆசிரியர் - அதுவும் ஜெயின் கமிஷன் அறிக்கையிலிருந்தே எடுத்துக்காட்டி!

திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்பது குறித்து Part III Vol. IV, Chapter VII என்ன கூறுகிறது?

விடுதலைப் புலிகளை இன்றும் ஆதரிக்கும் திராவிடர் கழகச் செயல் வீரர்கள் (D.K.Activists) பலர் உள்ளனர். ஆனால் திரு. ராஜிவ் காந்தி படுகொலையில் அவர்களில் எவர் ஒருவராவது சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டக் கூடியது எதுவுமே இல்லை என்றுதானே கூறப் பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டி சு.சுவாமியின் முகத்திலே கரியைத் தடவினார் கருஞ்சட்டை இயக்கத்தின் தலைவர்.

அத்தோடு விடுதலை அறிக்கையை முடிக்கவில்லை. கருஞ்சட்டைப் பட்டாளத்தின் தலைவர். ஓ, சு.சாமியே, உம்மைப் பற்றி ஜெயின் கமிஷன் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா? என்ற வினாவை எழுப்பி விலாவாரியாக எடுத்துக்காட்டி அங்குலம் அங்குலமாகச் சூடு போட்டாரே நினைவிருக்கிறதா?

அடுத்து, அதற்கும் வருவோம் !

                                                                                                                                              மின்சாரம்
http://viduthalai.in/new/page-8/3256.html

ஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண்டு

கிறித்துவத்தைப் பரப்புவ தற்காகப் பல மேலை நாட்டு அறிஞர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததுண்டு. கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் கிறித்துவம். நாட்டுக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்க வையே. அதிலும் சிறப்பாக தமிழ்த் தொண்டு ஆற்றிய பெரு மக்கள் தமிழர் வரலாற்றில் கம்பீரமாக நிற்கக் கூடியவர்கள் ஆவார்கள்.

ஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண்டு சாதாரணமானதல்ல. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந் தவர் இவர். ஜான்போப், கேதரைன் உக்லோ ஆகிய இணையர்க்கு மகனாய் பிறந் தவர் - இவரையும் சேர்த்து ஒன்பது மக்கள் அவர்களுக்கு.

1839 இல் சமயப்பணி ஆற்றிட கப்பல் மூலம் தென் னிந்தியாவுக்குப் பயணமானார்.

கப்பலில் பயணித்த எட்டே மாதங்களில் தன்னுடன் பயணம் செய்த வில்லியம் ஆர்தர் மற்றும் ஜோன்ஸ் கேரட் ஆகியோர் மூலம் தமிழை நன்கு கற்றவர். மொழி, வரலாறு, சமயம், மூன் றிலும் புலமை பெற்ற போப் ஜெர்மன், மலையாளம், கன்ன டம், தெலுங்கு ஆகிய மொழி களையும் கற்றார். தஞ்சாவூர், உதக மண்டலம், பெங்களூர் முதலிய இடங்களில் கல்விப் பணி, சமயப் பணிகளை ஆற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 1886இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவ்வாண்டில் தான் தம் வாழ் நாளில் அரிய பணியாக திருக்குறளைத் ஆங் கிலத்தில், மொழிபெயர்த்தார்.

இந்த அரிய பணி உலகச் சிம்மாசனத்தில் தமிழின் கரு வூலத்தை ஒளியிடச் செய்தது. நாலடியார் (1893) திருவாசகம் (1900) போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். இவர் தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் அன்றியும் தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் பெயருடன் வெளியிட்டார்.

இவர்தம் அரிய பணிக்காக ராயல் ஏஷியாடிக் சொசைட்டி எனும் அமைப்பு தங்கப் பதக்கம் அளித்து கவுரவித்தது.

இவரைப்பற்றி சில வரலாற்றுத் துணுக்கு மணிகள் முக்கியமானவை. இங்கிலாந் தின் அரசி எலிசபெத் சென்னை வந்தபோது (20.2.1861) சிறப் பாகத் தயாரிக்கப்பட்ட வெல் வெட் பெட்டகத்தில் ஜி.யு. போப்பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டு முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் யேல் பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றபோது போப், திருக் குறளை 50 பிரதிகள் தன்னுடன் எடுத்துச் சென்று அங்குள்ள நூலகங்களுக்கும், பேராசிரியர் களுக்கும், பிரமுகர்களுக்கும் அளித்து மகிழ்ந்தார்.

1904 (சனவரி 1) புத்தாண்டு வாரத்தில் கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாட லையும், மதுரை இளம் பெரு வழுதி எழுதிய உண்டாலமே இவ்வுலகம் என்ற பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டு அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

சைவ சித்தாந்தம் ஆரியக் கலப்பற்ற பண்டைத்தமிழரின் சமய நெறி என்ற வரும் இவரே! ஆரிய இனம் இங்கு ஊடுருவு வதற்கு முன்னதாகவே தமிழ் நாகரிகம் தனி வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தது என்பதையும் நிலை நாட்டினார்.

தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக் கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் இந்நாளில் தான் (1908) தம் 88ஆம் வயதில் தம் கண்அசைவுகளை நிறுத் தினார்.

- மயிலாடன்
http://viduthalai.in/new/page1/3211.html

திராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்

அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமீரகம் (துபாய்), குவைத் முதலிய நாடுகளுக்குத் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டுமென்று மத்திய அரசையும், வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாநில அமைச்சரவையில் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பல வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்புப் பாலமாகி, தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலுவது அதன் பணியாக அமைவது அவசியமாகும். பஞ்சாப், கேரள போன்ற மாநிலங்களில் இப்படி ஒரு தனி அமைச்சகத்துறை உள்ளது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது

- எனும் மேற்கண்ட தீர்மானம் திருப்பத்தூரில் (வ.ஆ.) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவிலும் (23.10.2010), மதுரையில் நடைபெற்ற தென் மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டிலும் (5.12.2010) நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (10.2.2011) இந்தத் திசையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.
இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும், காரணங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பற்றியுமல்ல, வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களில் நலம், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், தொலைநோக் கோடு இந்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

(1) பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளா தாரம் உலகமயம் ஆக்கப்பட்டதன் காரணமாகவும் வேலை தேடி அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். இந்தக் காரணத்தால் அவர்களின் உறவினர்கள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.

2) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் வேலையில் இருக்கும்போதும், அதற்குப் பின்பும் தாயகத்திலும், வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்சினைகளையும், சட்டப் பிரச்சினைகளையும் அடிக்கடி எதிர் கொள்கின்றனர்.

3) தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பெற்று வந்து, வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி தன்னைச் சார்ந்து இருப்பவர்களை இங்கு விட்டு, வேலை நாடிச் செல்வோர் பல்வேறு சட்டப் பிரச்சினைகளை எதிர்நோக்கு கின்றனர். அவற்றிற்குத் தாங்களே தீர்வு கண்டு மீண்டும் நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள இயலாமல் இருக்கின்றனர்.

4) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பினை வழங்குவது முக்கியமாகக் கவனத்திற்குக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

(5) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் இறந்த உடல்களை தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்குத் தேவைப்படும் நிதி உதவி வழங்குவதோடு, அதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்வதிலும், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இதுபோன்ற பிரச்சினைகள் நீண்டகாலமாக தமிழர்களுக்கு வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் இருந்துதான் வருகின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில் மானமிகு கலைஞர் தலைமையிலான அரசு கீழ்க்கண்ட திட்டத்தைக் கைக்கொள்ள விருக்கிறது.

தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் தங்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக, தொடர்பு கொள் வதற்காக தமிழ்நாடு அரசின் கீழ் தனியொரு முகவாண்மை அமைப்பு இல்லாததே அவர்கள் நலத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதாக இருந்தது.

இதற்காக அத்தமிழர்களின் நலனுக்காக ஒரு செயல் திட்டத்தினை உருவாக்கி, அதன்கீழ் ஒரு நல நிதியத்தை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, நிருவகிக்க ஒரு குழுமம் நிறுவப்படும் என்று அந்தச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை, திட்டத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், வெளிநாடுகளில் வாழும் உறவினர்களாகிய தமிழ்நாட்டுத் தமிழர்களும் மிகப் பெரிய அளவில் நன்றியுடன் போற்றுவார்கள் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. வாராது வந்த மாமணியாக இந்தத் திட்டத்தைக் கருதுவார்கள் என்பது யதார்த்தமாகும்.

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளைப் பார்த்த பிறகு இப்படியொரு சட்டம் எந்த அளவுக்குத் தேவை என்பது நிச்சயமாக உணரப்படும். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை நாம் அறிவோம்.

இந்தியாவுக்குள், வெளி மாநிலங்களிலும் வெளி மாநிலத்தவர்களுக்கும் பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக மகாராட்டிரத்தில் நீண்ட காலமாக பல சிக்கல்கள் இருந்தும் வருகின்றன.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொலைநோக்கோடு இத்தகைய சட்டம் தேவை என்று உணர்ந்துதான் திராவிடர் கழகமும் இந்த வகையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்த வகையிலும் மகிழ்ச்சியோடு தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதல் அமைச்சருக்குத் திராவிடர் கழகம் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. ஒருமனதாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது - நல்ல முன் மாதிரியாகும்.

http://viduthalai.in/new/page-2/3219.html

புலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)

தமிழர்களின் நெஞ்சில் என்றும் நிற்கக்கூடிய மாபெரும் புலவர் - பேராசிரி யர் கா. நமச்சிவாயர் ஆவார். அவருடைய பிறந்தநாள் இந்நாள் (10-02-1876).

வ.ஆ. மாவட்டம் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இராமசாமி முதலியார் - அகிலாண்டவல்லி இணை யருக்கு மகனாகப் பிறந்தவர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரான தம் தந்தை யாரிடம் துவக்கக் கல்வி பெற்றார்.

சென்னையில் செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளி, நார்த் விக் மகளிர் பாட சாலை, சிங்கிலர் கல்லூரி, எஸ்.பி.ஜி. உயர்நிலைப்பள்ளி, இராணி மேரி கல்லூரி - இறுதியாக சென்னை மாநிலக் கல்லூரி (Presidency college) ஆகியவற்றில் தமிழ் ஆசிரியராக அரும்பணி புரிந்த பெருமான் இவர்.

1920 முதல் 1934 வரையில் அரசு தமிழ்க் கல்விச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். தமிழாசிரி யர்கள் தனித்தமிழ் தேர்வு எழுதி வித்துவான் பட்டம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் இவரே! நல்லா சிரியன் எனும் திங்கள் இதழை 15 ஆண்டுகள் நடத்தி, ஆசிரியர்களுக்கு நல்வழிகாட்டிய நன்மகனும் இவரே!

பாடநூல்களை எழுதி யவர் இவர். ஆத்திசூடி, வாக் குண்டாம் - நல்வழி முதலிய சிறு நூல்கள் மட்டுமல்ல; தொல்காப்பியம், பொருள திகாரம், இளம்பூரணம் இறையனார் களவியல் முதலிய பெரு நூல்களையும் பதிப்பித்த சாதனை இவருக் குரியது.

ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்புக்கு இவர் பெயரை தந்தை பெரியார் வெளிப்படுத்தியுள்ளார்.

காலஞ்சென்ற கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81. அதே நேரத்தில் அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரி என்பவருக்கு மாத சம்பளம் ரூ.300-க்கும் மேல்.

இதுகுறித்து சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த பனகல் ராஜா அவர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் மனம் கொதித் துக் கூறினார். நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார். அதன் பிறகே சமஸ்கிருதப் பேராசிரியர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் இடையே இருந்த சம்பள வேறுபாடு நீக்கப்பட்டது.
(ஆதாரம்: தந்தை பெரியார் உரையிலிருந்து விடுதலை 15.2.1960)

தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார்? நீதிக்கட்சி என்ன சாதித்தது என்று சந்துமுனையில் சிந்து பாடும் தி(தெ)ருமேனிகள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!

1934ஆம் ஆண்டு பொங் கல் திருநாளினை தமிழ்த் திருநாள் எனக் கொண்டா டியபோது நமசிவா யர் பாடிய பாடல் ஒன்று இதோ:

தேனினும் இனிய
செந்தமிழ் மொழியே
தென்னாறு விளங்குற
திகழுந்தென்மொழியே
ஊனினும் ஒளிர்வுறும்
ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வாய்
ஒளிர் தமிழ்மொழியே
வானினும் ஓங்கிய
வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா
வயங்கு தென்மொழியே
தானியல் சிறப்புறுந்
தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய்
தண்டமிழ் மொழியே
என்பதுதான் நமசிவா யரின் அந்தப் பாடல்
                                                                                                                                         - மயிலாடன்

http://viduthalai.in/new/e-paper/3187.html

உடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்

தந்தை பெரியாரைப் பின்பற்றி வந்தவர்தாம் நம் உடுமலை நாராயணகவியாரும். அவர்தம் பாடல்களில் பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் பரந்துபட்டுக் கிடக்கின்றன. அவரே தந்தை பெரியார் பற்றி எழுதிய பாடலும் உள்ளது.

இழிவை நீக்கும் ஈ.வெ.இராமசாமி என்ற எங்கள் தந்தை உண்மைப் பெரியார்

பல்வகைக் குமுகாயநலப் பாடல்களை எழுதியிருந்தாலும் நாராயணகவியாரின் பாடல்களில் பகுத்தறிவுக் கருத்துள்ள பாடல்களே பெருமளவில் இருக்கின்றன. பகுத்தறிவுக் கொவ்வாத; பஞ்சாங்கப் பாடைதனைப் பார்ப்பனர்கள் சரிபாதி; பாய்ச்சி விட்டனர்...

உடுமலையாரின் பிறப்பும் - வாழ்வும்:

அன்னைத் தமிழகத்தின் கொங்கு நாடாய்ப் போற்றப்பெறவது கோவை மாவட்டம். அங்கு உடுமலைப்பேட்டை வட்டம், பூவிளைவாடி (தற்போது பூளவாடி) என்னும் சிற்றூரில் திருவள்ளுவராண்டு 1930 (25.09.1899) இல் பிறந்த நம் உடுமலையாரின் தாயார் பெயர் திருவமை, முத்தம்மாள்; தந்தையார் பெயர் திருவமை. கிருட்டிணசாமி ஐயா, உடுமலை நாராயணகவியாருக்குப் பெற்றோரிட்ட பெயர் நாராயணசாமி. சாதிப் பெயர் களைப் பின்னொட்டாகப் போட்டுப் பெயர்களை எழுதும் ஓர் தீய வழக்கம் வெகுவாகப் பரவியிருந்த அக் காலக் கட்டங்களில் பகுத்தறிவுச் சுடராக ஒளிர்ந்த நம் உடுமைலையார் அவர்கள், சாதியால் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் தாம் பாடலியற்றும் தொழிலால்தான் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் கருதியே தம் பெயருக்குப் பின்னால் கவி என்னும் பின்னொட்டைச் சேர்த்து நாராயணகவி என்று தன்னைக் குறிப்பிடச் சொன்னார். உடுமலைப் பேட்டை எனும் தன் ஊரின் பெயரை முன்னொட்டாகக் கொண்டு உடுமலை நாராயணகவி என அன்போடு அழைக் கலானார்.

தந்தை பெரியாரைப் பின்பற்றி வந்தவர் தாம் நம் உடுமலை நாராயணகவியாரும். அவர்தம் பாடல்களில் பெரியாரின் பகுத் தறிவுக் கருத்துகள் பரந்துபட்டுக் கிடக் கின்றன. அவரே தந்தை பெரியார் பற்றி எழுதிய பாடலும் உள்ளது.

இழிவை நீக்கும் ஈ.வெ.இராமசாமி என்ற எங்கள் தந்தை உண்மைப் பெரியார்
பல்வகைக் குமுகாயநலப் பாடல்களை எழுதியிருந்தாலும் நாராயணகவியாரின் பாடல்களில் பகுத்தறிவுக் கருத்துள்ள பாடல்களே பெருமளவில் இருக்கின்றன.

பகுத்தறிவுக் கொவ்வாத
பஞ்சாங்கப் பாடைதனைப் பார்ப்பனர்கள் சரிபாதி
பாய்ச்சி விட்டனர்...

மூடநம்பிக்கை மறுப்பு

அறிவினாலும் அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மாந்தர் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள்மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூட நம்பிக்கையே.

ஆகூழ் (அதிர்ஷ்டம்), ஓகம் என்னும் பெயரில் குமுகாய மக்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கைகள் பெருமளவு, ஆகூழைக் காரணங்காட்டியே உழைக் காமல் சோம்பேறிகளாக உள்ள மாந்தரும் நிறையப் பேர் உள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே உடுமலையார், ஆளை ஏய்ச்சுத் தின்பார் எல்லாம்வேலை செஞ்சே தீரணும்
என்ற தம் பாடல் வரிகளில் மூட நம்பிக்கைக்கு வேட்டு வைக்கிறார்.

கடவுள் மறுப்பு:

திராவிடக் கருத்துகளின் வழித் தோன்றலான நம் உடுமலையாரின் பாடல் களில் கடவுள் மறுப்புக் கொள்கையும் வெளிப்படையாகக் காணப்படுகிறது.
காலஞ் செய்கிறதைக் கடவுள் செய் யாதென்று கவனத்தில் வையுங்கடா...
கடவுள் நம்பிக்கைக்காரரால் கல்விக் கடவுள் என்று சொல்லப் பட்டு வரும் கலைவாணி, தன் கணவன் நாக்கில் குடியிருப்ப தாகச் சொல்லப்படும் வடிகட்டிய மூடத்தனத்தைத் தனக்கே உரிய நகைச் சுவையுணர்வுடன்...
மறையவன் நாவிலவள் உறைவது நிசமானால்
மலசலம் கழிப்பது எங்கே? எங்கே? என்று பகடி செய்கிறார்.

சாதி மறுப்பு:

மண்ணுலகில் ஆண் சாதி, பெண் சாதி என்னும் இரண்டு சாதி தவிரப் பிரி வினை செய்யும் பிறசாதிகள் இல்லை யென்றும், அப்படிப் பிரிவினை செய்வதால் வாழ்வில் நன்மையில்லை என்றும் கூறுகிறார்....
பெண்ணும் ஆணுமெனப் பிறந்த சாதியது
மண்மேல் ரெண்டுதான் வேறில்லை
என்று சாதிமறுப்பை வலியுறுத்திப் பாடுகிறார்.

மத மறுப்பு:

சாதிமத பேதம் இல்லாமலே
தன்னலம் எண்ணாமலே மேலாம்
நாடு செழித்திடவும் நாடு...
என்பதன் மூலம் நாடும் நாட்டு மக்களும் தாழ்வடையாமல் உயர்ந்து விளங்கித் தழைத்தோங்கிடத் தன்னல மின்றி, சாதி - மத வேற்றுமையின்றி வாழ வேண்டும் என்கிறார்.

உடுமலை நாராயண கவியார் பாடல் களில் பொதுவுடைமை உணர்வுகளும் ஏழை, எளியோர் மீதான இரக்க உணர்வும் தேங்கியுள்ளன.
மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது
அந்தக் காலம்
மடமை நீங்கிப் பொதுவுடைமை கோருவது
இந்தக் காலம்...
இதில், அந்தக் காலம் போல் பிறரை ஏய்த்துப் பிழைக்காமல் பொதுவுடைமை வேண்டும் இக்காலத்தில் என்கிறார்.

பெண்ணியம்:

ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல்களில் பெண்களை ஆண்கள் பேய்கள் என்றும் குரங்குகள் என்றும் இழிச்சொல், பழிச்சொல் கூறி நடத்தி வந்தனர். அப்படிப் பழிக்கும் ஆண்களுக் கெல்லாம் பெண்களைத் திருமணம் செய்வித்து அவர்களுக்குப் பெண்ணின் பெருமையை உணரச் செய்வதாக, பெண்குலத்தைப் பேய்கள் என்ற பித்தர் தம்மையே பெண்டு
பிள்ளைக்குட்டி உள்ளவராய்
மாற்றி விடுவோம்...

அறிவியல் பார்வை:

குழந்தைப் பேறு வேண்டி மக்கள் அந்தக்காலம் போல் காசிக்குப் போகாமல் அறிவியல் கண்டுபிடிப்பில் உருவான ஓர் ஊசியைப் போட்டாலே போதும் என்பதைத் தான் பாடலில் உணர்த்துகிறார். குடும்பக் கட்டுப்பாட் டுத் திட்டத்தைத் தம் பாடல்வழி வலி யுறுத்திய பெருமை உடுமலையாரையே சாரும். அறிவியலை ஏதோ மேலோட்ட மாகப் பாராமல் அறிவியலின் வளர்ச் சியை ஒவ்வொரு படிநிலையாக ஆழமாக விரித்துரைத்துள்ளார். குழந்தைப் பேறின்மை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அது குறித்த மூட நம்பிக்கைகளை விட்டொழித்துவிட்டு, அறிவியலின் வளர்ச்சியைப் பயன்படுத்தி அக்குறைபாட்டை அகற்ற வலியுறுத்து கிறார்.

காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற
காலம் மாறிப் போச்சு - இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகும் என்ற
உண்மை தெரிஞ்சு போச்சு
என்று மூடத்தனத்தை விடச் சொல்லி அறிவியல் நோக்கில் காட்டுகிறார் உடுமலையார்.

இலக்கிய நயம்:

படைப்பாளிகளின் படைப்புத் திறனை அளந்தறிவதற்கு அவர்தம் உவமைகள் மிகச் சிறந்த அளவு கோல்களாய் அமைகின்றன. உடுமலையாரின் உவமை களைக் கொண்டு அவரின் படைப்புத் திறனை அளக்கும்போது அவர் இலக் கிய வானில் உயர்ந்து விளங்குகின்றார். உடுமலையார் பாடல்களில் உவமை உத்தி, பல்வேறு இடங்களில் மிளிர் கிறது. வானத்து நிலவைப் பெண்ணின் முகத்திற்கு ஒப்பிடுகின்றார். அதில் அவள் கண்களை மீன்களாக உவமைப் படுத்துகின்றார்.

வெண்மதித் துண்டொன்றில் வில்லிரண்டும் கெண்டை
மீன்களிரண்டும் கண்டேன்...

இறப்பு:

புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார், தம் 82 ஆம் அகவையில் - தி.பி.2012 (23.05.1981) இல் உயிர்துறந்தார். அவர்தம் இறப் பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்த பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்துள் ளார். அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனி மேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அள விலே விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண் டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன் றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக் காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வி யிலே மேன்மை இது போதுமானது. இது தவிர வேறு எதையும் செய்யா தீர்கள். இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங் களுக்கு ஆளாகி, என்பின்னோர்க்கு (வாரிசு களுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்து விட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு உங்கள் மதிப்பைக் காப் பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனை யும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை விணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத் துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை! என்று எழுதிவைத்துள்ளார். காலத்தை வென்ற - வரலாற்றுப் புகழ் மிக்க எண்ணற்ற பாடல்களை எழுதி, தமிழ்க்குமுகத்திற்கு விழிப் புணர்வை ஊட்டிய உடுமலை நாராயண கவி யாரின் மறைவு நமக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பாகும்.

                                                                            (நன்றி: புதிய புத்தகம் பேசுது, பிப்ரவரி 2011)

                                                                                                                               த.அருள்சோதி

Thursday, February 10, 2011

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?

மானமிகு கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து பிராண்டுகிறார்?

மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்?

ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்?

சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர் களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்?

ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா?

இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்?

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியதில்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் இவ்வளவுப் பெரிய தடபுடல்!

ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் பெரிய விளம்பரம்.அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதைப் புரிந்துகொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான காரணம் சாங் கோபாங்கோமாக பஷ்டமாக பளிச்சென்று புரிந்து விடும்.


இதோ ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச் சர்கள் என்ன ஃபார்முலாவைக் கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி: ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
(குமுதம் ரிப்போட்டர் 5.12.2010 பக்கம் 43)

இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச் சர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை?விளக்கம் அளித்தாரா?

விவாதம் புரிந்தாரா?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் கவலையில்லையாம்!இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம்.

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றிப் பேசுவார்களா?

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி விழுந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் முடியுமா?

அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில் (ஏப்ரல் 14, 2006)

ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே அரசியல்வாதி நீங்கள்?

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் கலந்துகொண் டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்?

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது. (விஜயபாரதம், 14.4.2006)

இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா இந்த பேட்டிக்கு?

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட சங்பரிவார் பக்கம்.

இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? அப்படியே பேசுகிறார்- அப்படியே நடந்து கொள்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார்.

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியா வாம்-ஜெயலலிதா இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!).

சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்ய வேண்டு மாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் பேசுவார்.

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம்.

அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் கொலையே செய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது எல்லாம் சோனியாவின் பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந் திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா?

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-இவையெல்லாம் குற்றம் இல்லையாம்!

இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து வாங்குவாராம்; 20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது!

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் விவரமாகவே தெரியும்.

முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.http://naathigam.blogspot.com/2011/02/2_11.html

                                                                                                                                          --மின்சாரம்-

2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வின் முகத்திரை கிழியும்

2ஜி அலைக்கற்றை முறைகேடு குறித்து 2003ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்திட நீதியரசர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக் கப்பட்ட அறிவிப்பு வந்தாலும் வந்தது பா.ஜ.க., வட்டாரத் தின்வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது.

அவருடைய அறிக்கை வெளியாயிற்று. இந்தக் கால கட்டத்தில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகப் பதவியில் இருந்தவர்கள் தவறான முடிவு எடுத்துச் செயல்பட்டுள்ளனர் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

தன்னுடைய வேடம் அம்பலமாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் திரு அருண்ஷோரி படபடக்கிறார்; பதை பதைக்கிறார்.

நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கையே தவறானது - உண்மையைத் திரித்துக் கூறுகிறது - மத்திய அரசைக் காப்பாற்றும் தன்மையில் அமைந்துள்ளது என்று குற்றப் பத்திரிகைப் படிக்கிறார்.

அது என்ன தணிக்கைத் துறை அறிக்கை என்றால் அசல் நெய்யில் பொரித்தது; சிவராஜ்பாட்டீல் ஆணையத் தின் கருத்து என்றால் கலப்பட எண்ணெய்யில் பொரித்ததா?
தங்களுக்கு சாதகமாக இருந்தால், அரசியலில் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டால் அது சரியானது; தங்களுக்குப் பாதகமாக இருந்தால் அது தவறுடையது என்று கூறும் ஒரு மட்டக் கோலைத் தயாராக வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ!

பா.ஜ.க., ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன?

யூகத்தின் - அனுமானத்தின் அடிப்படையில் அல்லாமல், இழப்பு என்ற கண்ணோட்டத்தையும் கடந்து உண்மையிலே ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றெல்லாம் ஆதாரப் பூர்வமாகத் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

1999ஆம் ஆண்டு வாஜ்பேயி தலைமையில் அமைந்த அரசில்தான் இந்தப் பிரச்சினைக்காக கால்கோள் விழா நடத்தப்பட்டது. புதிய தேசியக் கொள்கையை இந்தத் துறையில் வகுத்தது வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தானே - இல்லை என்று மறுக்க முடியுமா?

பல தனியார் நிறுவனங்கள் வாஜ்பேயி காலத்தில் பெரும்பலன் பெற்றனர். அந்த நிறுவனங்கள் சிலரோடு பிரதமர் வாஜ்பேயின் வளர்ப்பு மகளின் கணவனுக்குத் தொடர்பு இருந்தது என்ற உண்மை அப்பொழுது வெளிப்படவில்லையா!

நிராராடியாவின் டேப் விவகாரத்தில் அந்தப் பெயர் இடம் பெற்றுள்ளதே  - அதைப்பற்றி ஏன் வாயைத் திறப்ப தில்லை? உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப் பனத்தி கதையாக பா.ஜ.க. வட்டாரம் விழி பிதுங்குகிறதே!

தனியார் நிறுவனங்கள் நட்டப்பட்டன என்று கூறி அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் கட்டமாகத் தள்ளுபடி செய்யப்பட்டதா - இல்லையா?

ஆ. இராசா அவர்கள்மீது இவர்கள் கூறும் குற்றச் சாற்று என்பது அனுமானத்தின் அடிப்படையிலானது. ஆனால் வாஜ்பேயி காலத்தில் நடைபெற்றதோ -  அரசுக்கு வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதாகும்.

பா.ஜ.க., ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. சோவை அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று நக்கீரன் இதழில் (2011 சனவரி (1-4) விரிவாக வெளிவந்ததே!

அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் ஜக்மோகன் கண்டிப்பானவர். தனியார்துறை முதலாளிகளுக்கு ஆதரவாக லைசென்சு வழங்கும் முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டதை அவர் எதிர்த்தார். தொலைத் தொடர்புத் துறை லாபத்தில் இயங்க என்ன செய்யவேண்டும் என்று அவர் வாஜ்பேய்க்கு ஒரு பட்டியலையே அளித்தார். தனியார்த்துறை தொழில் அதிபர்களுக்குக் கடிவாளம் போடவில்லையென்றால், அவர்கள் செல்வம் கொழிக்கும் இந்தத் துறையையே சீரழித்து விடுவார்கள் என்றார்.

ஆனால் ஏர்செல் கம்பெனி நிறுவனர் சுனில்மிட்டல் என்ன சொன்னார் தெரியுமா? இன்னும் சில மணி நேரங்களில் ஜக்மோகன் தூக்கி அடிக்கப்படுவார் என்றார். வருவாயைப் பெருக்க ஜக்மோகன் தந்த குறிப்பு கள் குப்பைக் கூடைக்குப் போயின. சுனில்மிட்டல் சொன்ன படி ஜக்மோகன் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்.

அப்போதுதான் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றது. ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல்  நடைபெற் றது.

ஊழல் என்றால் வருமானத்தில் இழப்பு அல்ல. உண்மையிலேயே தனியார் துறைக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அந்த ஊழலைத்தான் மத்திய அமைச்சர் கபில்சிபல் அம்பலப்படுத்தினார் என்று மூத்த பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு அவர்கள் தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லையே - ஏன்?

நீதியரசர் சிவராஜ்பாட்டீல் அறிக்கை வெளிவந்ததும் வராததுமாகத் தாண்டிக் குதிக்கும் திருவாளர் அருண் ஷோரி சென்னைக்கு வந்தபோது என்ன கூறினார்? ஆ. இராசாவால் ஏற்பட்ட இழப்பு என்பது ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியல்ல; வெறும் 22 ஆயிரம் கோடி ரூபாய்தான் - தவறாகச் சொல்லாதீர்கள் என்று சொன்னாரா - இல்லையா?

வாஜ்பேயி காலத்தில் மிகவும் வெளிப்படையாக தனியார் துறைகளிலிருந்து அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய ரூபாய் 50 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதைக் கணக்கில் கொண்டால், ஆ. இராசா காலத்தில் ஏற்பட்ட இழப்பு மிக மிகச் சாதாரணமானதாகும்.

அதே நேரத்தில் இந்த இழப்பு என்பதுகூட பொது மக்களுக்குக் குறைந்த செலவில் தொலைப்பேசி வசதி கிடைத்த இலாபத்தோடு இணைத்துப் பார்த்தால் அவ்வாறு கூறுவதுகூடத் தவறானதாகும்.

இவர்கள் துடியாய்த் துடிப்பதிலிருந்தே நீதியரசர் சிவராஜ் பாட்டில் ஆணையத்தின் அறிக்கை பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அது பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழிக்கும் என்று தெரிகிறது.
http://viduthalai.in/new/page-2/3194.html 

Wednesday, February 9, 2011

தி.மு.க.வின் பெருந்தன்மை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்களன்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தக் கூட்டத் தொடரில், உடல் நலிவின் காரணமாக, மருத்துவர் ஆலோசனைப்படி கலந்துகொள்ள முடியாத நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளார் என்றும், அதற்கு அனுமதி வேண்டும் என்றும், கோரிய அந்தத் தீர்மானத்தை அரசியல் கண்ணோட்டமின்றி, ஆளும் தி.மு.க., ஏற்றுக்கொண்டு, அந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறிட ஒத்துழைப்புத் தந்தது.

தனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஒருவர் கூறும் போது, அதில் அரசியலை நுழைக்காமல், மிகவும் பெருந் தன்மையோடு தி.மு.க. நடந்துகொண்டு இருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் அவர் கண்டிப்பாகக் கலந்து கொள்ளவேண்டியது சட்ட ரீதியான நிலையெல்லாம் உண்டு. புதிய சட்டப்பேரவையில் தாம் காலடி எடுத்து வைக்கப் போவதில்லை என்று சபதம் செய்து இருக்கிறாரே - இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு சட்ட ரீதியான அணுகுமுறையை அ.இ.அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தபோது, அதற்குள்ளிருக்கும் விவகாரங்களுக்குள் போகாமல், தீர்மானத்திற்குத் தி.மு.க. ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறது.

அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுவுடைமை இயக்க வீரர் தோழர் ப. ஜீவா அவர்களின் இல்லத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொள்கை வேறுபாடு வேறு - ஒருவரை ஒருவர் மதிப்பது என்பது வேறு என்று உயர்ந்த பண்பாடுபற்றி எடுத்துக் கூறினார்.

அதற்கு எடுத்துக்காட்டாக தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் விளங்கினார்களே என்றும் சுட்டிக்காட்டினார்.

அன்றைக்கே சட்டப்பேரவையில்- காலையில் திருமணத்தில் கூறிய அந்தப் பண்பாட்டுக்கு இலக்கணமாக - அ.இ.அ.தி.மு.க. கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தை நிறைவேறும்படிச் செய்தார்.

அ.இ.அ.தி.மு.க. என்றால் எப்படி நடந்துகொண்டி ருக்கும் என்பது வெளிப்படை! உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திரு. முரசொலி மாறன் அவர்கள் ஒரு குறிப் பிட்ட மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்படு வதற்குக்கூட முட்டுக்கட்டை போட்டவர்கள் யார் என்று தெரியுமே!

ஆன்டன் பாலசிங்கத்துக்கு மருத்துவ உதவி இந்தியாவுக்குள் எங்கும் செய்யப்படக்கூடாது என்று கறாராகக் கூறிய மனிதாபிமானிகள் ஆயிற்றே...!

அத்தகையவர்களுக்கு நல்ல புத்தியைக் கற்பிக்கும் வகையில்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறள்மொழிக்கு ஏற்ப, கலைஞர் தலைமையிலான தி.மு.க. நடந்துகொண்டிருக்கிறது என்பது சாதாரண மானதல்ல!

பொதுவாழ்வில் கலைஞர் அவர்கள் காட்டிய முன்மாதிரியை மற்றவர்களும் தொடர்ந்தால், அது தந்தை பெரியார் பக்குவப்படுத்திய பண்பாட்டுக்குப் பெருமை சேர்த்ததாகவே அமையும்.

இந்த நேரத்தில், தி.மு.க.வின் இன்னொரு பெருந் தன்மையான செயல்பாட்டை எடுத்துக்காட்டுவதும் அவசியமாகும்.

தேனி மாவட்ட பஞ்சாயத்துக்கு மொத்தம் பத்து மாவட்டக் கவுன்சிலர்கள்; உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 6, அ.இ.அ.தி.மு.க. 3, ம.தி.மு.க. ஒரு இடம் என்றவாறு கைப்பற்றின.
தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதாகும். தி.மு.க. வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர் யாரும் இல்லை. இதனால் தலைவர் பதவிக்கு தி.மு.க. போட்டியிட முடியாத நிலை.

அதே நேரத்தில், அ.இ.அ.தி.மு.க.வில் 2 தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் இருந்தாலும், வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கைப் பலம் இல்லை. மாவட்டத் துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த வீரராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

ஆனால், தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாத இழுபறி நிலை; மூன்று முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். மானமிகு கலைஞர் அவர்களோ இந்தப் பிரச்சினையை வெறும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல், தி.மு.க. உறுப்பினர்களை அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பணித்தார்.

4 ஆவது முறையாக மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் டீனா தலைமையில் தேர்தல் நடைபெற்றது (19.12.2006). அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக ரமாதேவி மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார்.

தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று உண்டு. அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் வராததால், வாக்களிக்கவும் முடியவில்லை.

தி.மு.க.வின் பொறுப்புணர்ச்சியையும், அ.இ.அ.தி.மு.க. வின் பொறுப்புணர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

தி.மு.க. இருந்த இடத்தில் அ.இ.அ.தி.மு.க. இருந் திருக்குமேயானால், கலைஞர் அவர்கள் காட்டிய பெருந்தன்மையை செல்வி ஜெயலலிதா காட்டியிருப்பாரா என்பதை எவரும் சிந்தித்துப் பார்க்கட்டும்!

அரசியலில் தி.மு.க. காட்டிய இந்தக் கண்ணியம் மற்றவர்களால் பின்பற்றத் தகுந்ததாகும்.
http://viduthalai.in/new/page-2/3081.html

கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி

3.2.2011 அன்று தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மான விளக்கப்பொதுக் கூட்டத்தின்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தாலான வீரவாள் ஒன்றினையும், கிரீடம் ஒன்றினையும் மாவட்ட கழகத்தின் சார்பில், தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பரிசாக வழங்கினார்.


அந்த வீரவாளினையும், கிரீடத்தையும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை தியாகராய நகரில் நடைபெறும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை திறப்பு விழாவின்போது ஏலமிட்டு அதில் இருந்து கிடைக்கும் மொத்த தொகையையும் சிலம்புச்செல்வரின் குடும்பத்துக்கு வழங்கிட முடிவு செய்துள்ளார் என்று தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலம் விட்டதில் ரூ.55 லட்சம் கிடைத்தது. அதனை ம.பொ.சி. குடும்பத்துக்கு நிதியுதவியாக வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
நக்கீரன்

மகன்: தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் கூறியுள்ளாரே, அப்பா!

அப்பா: சபாஷ்! எல்லா வகையிலும் அ.இ.அ.தி.மு.க. வுக்கு மிகப் பொருத்தமான கூட்டு அதுதான் மகனே!


பார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடியும்

உலகக் கோப்பை கிரிக் கெட் வரும் 19 ஆம் தேதி துவக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாதான் கோப் பையைத் தட்டிப் பறிக்கப் போகிறது என்று மூக்கை சொறிந்து விடுகிறார்கள் விமர்சகர்கள்.

அதற்குள் மும்பையில் இந்தியா கோப்பையை வென் றெடுக்க வேண்டும்  என்பதற் காக சித்தி விநாயகர் கோயி லில் விசேஷ பூஜை நடத்தப் பட்டதோடு, சாமி ஊர்வலத் தையும் நடத்தியுள்ளனர்.

இந்துத்துவா மனப் பான்மை என்ற ஒன்று இருக் கிறது. எதிலும் பக்தி ஆஷா டத்தைத் திணிப்பது என்பது அதன் ஆசாரக் குணமாகும். மனிதனின் திறமை, தன் னம்பிக்கை, உழைப்பு இவற் றின் மரியாதையைக் குலைப் பது என்பதுதான் அதன் திரிசூலமாகும்.
கடவுள் சக்தியால் இந் தியா வெற்றி பெறவேண்டும் என்றால், வெற்றி எப்படி விளையாட்டு வீரர்களுக்குச் சொந்தமாக முடியும்?

வெற்றிக்குக் காரணம் கடவுள் சக்தியென்றால், தோல்வி அடையும்போது கடவுளின் தோல்வி என்று ஒப்புக்கொள்வார்களா? அத்தகைய அறிவு நாணயம் எல்லாம் இந்த இந்துத்துவா பார்ப்பனீய மரபில் கிடையவே கிடையாது.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று பிரபல ஜோதிடர்கள் எல்லாம் துண் டைப் போட்டுத் தாண்டினார் கள். தோல்வியில் முடிந்தது என்றவுடன், துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில் இடிபட ஓடினார்கள்.

சென்னை அண்ணா நகரில் கடந்த உலகக் கோப் பையின் போது கிரிக்கெட் விநாயகர் கோயிலே உரு வாக்கப்பட்டது. வலது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பதுபோல ஒரு விநாயகரும், இடது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பது போல மற்றொரு பிள்ளை யாரும் பிரதிஷ்டை செய்யப் பட்டன.

பிள்ளையாரைத் தோத் தரிக்கும் பாடல்கள் அடங் கிய குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இந்தி யிலும், சமஸ்கிருதத்திலும் அந்தப் பாடல்கள் அமைந்த திலிருந்தே பார்ப்பனர்கள் தான் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. (கிரிக்கெட்டே பார்ப்பனர்களுக்கான தனி உடைமைதானே!)

குறுந்தகடில் இடம் பெற்ற கிரிக்கெட் பஜன் வருமாறு:

ஏகாதச சிரச கிரிக்கெட் கணபதி
ஸ்வாகதம் சரணாகதம்
தஷிண நான திரிலோச்சன
கிரிக்கெட் கணபதி ஸ்வாகதம்
சரணாகதம்
வாமஹஸ்த திரிலோச்சன கிரிக்கெட்
கணபதி ஸ்வாகதம் சரணாகதம்
ஓம் பவுண்டரி மார்னே வாலே நமஹ
ஓம் சிக்சர் மார்னே வாலே நமஹ
ஓம் ஆல் ரவுண்டராய நமஹ
ஓம் கேட்ச் பக்கட்னே வாலே நமஹ
இந்தி, சமஸ்கிருதத் துக்கு இடையிடையே இங் கிலீஷும் வேறு.
அத்தோடு விட்டார்களா?

சென்னை குரோம் பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளி யில் சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தினார்கள். 1500 மாண வர்கள் அதில் கலந்துகொண் டனர். (ஆதாரங்கள்: இந்தியா டுடே, 21.3.2007).

இவ்வளவு செய்தும் இந் திய அணி ஊத்திக்கிட்டது தான் மிச்சம்!
கிரிக்கெட் மட்டுமல்ல, பார்ப்பனிய இந்துத்துவாவின் கடைசி வேர் இருக்கும் வரைக்கும் வீரம், விவேகம், கம்பீரம், தன்னம்பிக்கை அனைத்தும் காயடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்க!
- மயிலாடன்

http://viduthalai.in/new/page1/3076.html

திருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய புராணமும் வரலாறும், உண்மையும் இடறுகிறது

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
சமயக்குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர் - அப்பர் எனும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். இந்த நால்வர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படு கிறது. அதிலும் திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் அற்புதங்களை அவரே நிகழ்த்தியதாகவும், அதுவும் இறையருளாலே நிகழ்த்தப்பட்டதாகவும் நம்பப்படு கிறது.

இந்நிலையில் இளமையில் இருந்தே இது குறித்து அவ்வப்போது அய்யங்கள் எழுவது உண்டு. அதிலும் நான் பிறந்து வளர்ந்த திருமங்கலத்தில் என்னுடைய வீட்டை ஒட்டிய தெருவில் உள்ள அருள் மிகு பத்ரகாளி மாரியம்மன் கோயிலில் ஆறாம் திருவிழாவில் சமணர் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெறுவதும் உண்டு. இது இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆறாம் திருவிழாவில் சைவ, சமண விவாத மாக நடைபெறுகிறது.. காக்காவேஷம், சாமியார் வேஷம் என்று கூறும்படி, சமணர்களாகவும், சைவர்களாகவும் வேடமிட்டுச் சாமி ஊர்வலத்தில் வருவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கோவில் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார் களுக்குப் பாத்தியப்பட்டது. பரம்பரை டிரஸ்டிகள் என அனைவருமே நாடார்களால் நிருவகிக்கப்படுவது.

நாட்டாண்மை முறை பரம்பரை டிரஸ்டி தலைமை யில் இயங்குவது திருமங்கலத்தில் மட்டும்தான். பரம்பரை டிரஸ்டி வி.வி.பி. சிதம்பர நாடார், வி.வி.பி.சி. சவுந்திரராஜன், வி.வி.பி.சி. ரமேஷ் பாபு என்று நாடாரே ஆவர். நாட்டாண்மைகரம் அப்படியே முதல் நாட் டாண்மை நல்லதம்பி நாடார் வகையறா சி. ரத்தினம், இரண்டாவது நாட்டாண்மை ராக்கி நாடார் வகையறா - மாஸ்கோ நாடார். மூன்றாவது நாட்டாண்மை பொன்னுலிங்க நாடார் வரையறா வி.வி.முருகேசன்; மேலும் பரம்பரையாகப் பன்னிரண்டு காரியக்காரர்கள். இப்படி நாடார்கள் உருவாக்கிய, நாடார்களுக்கே சொந்தமான மாரியம்மன் கோவிலில் நாடார்கள் ஒரு பிரிவினர் காக்காவேஷம் என்று சமணர் வேஷம் போடுவதும், ஒரு பிரிவினர் சாமியார்கள் என்று திருஞான சம்பந்தராயும், அவருடைய சைவ அடியார்களாகக் காவி அணிந்து, பட்டை கொட்டை அணிந்து சைவர் வேஷம் போடுவதும் நடைபெறுகிறது.

அது மட்டுமல்லாது சமணர் வேஷம் போடுபவர்கள் நீண்ட அங்கி, தலையில் கருப்புக்குல்லாய், கையில் கத்தையாக மயிற்பீலி ஏந்தி அருகனே துணை அருகனே துணை அவாளுக்கு நாம் என்ன ஒக்கப்போட்டு ஆக்கியவாளா என்பதும் கூறுவர். சைவர்களோ கையில் உத்திராட்சத்தை உருட்டிக்கொண்டு நமசிவாயா, நமசிவாயா என்று குரல் எழுப்புவர். சமணர்கள் பகலில் முக்கியமானவர்கள் வீடுகளுக்குச் சென்று காபி, சிற்றுண்டி ஏற்று ஆசிர்வாதம் செய்வர்.

இரவில் இரண்டு மணி அளவில் திருமங்கலம் குண்டாற்றின் கரையில் அமைந்துள்ள கழுவேற்றப் பொட்டல் என்னுமிடத்தில் சமணர்கள் எதிர் எதிராக அமர்ந்து சமணர்கள் பாட்டு என்று பாடல்களைப் பாடுவதும், சைவர்கள் திருஞானசம்பந்தர் பாடல்களைப் பாடுவதும் செய்து, சமணம் உயர்ந்ததா? சைவம் உயர்ந்ததா என்று வாதிடுவார்கள்.
இந்தத் திருமங்கலத்தைச் சேர்ந்த பத்திரகாளி மாரியம்மன் கோயில் பழைய குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் உள்ள தகவல்கள் இவை. அக்காலத்திய தமிழில் உள்ளது. இதில் திருஞானசம்பந்தர் கூட்டத்தார் நிகழ்த்திய அனல்வாதம், புனல்வாதம் என்பது மோசடி என்று கூறப்பட்டிருப்பதைப் படித்தபோது திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் பற்றிக் கூறியதை ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது.

பழைய குறிப்பில் கிட்டும் செய்திகள்

மதுரையில் பாண்டிய அரசர் மூலமாக சமணாசிரியர் கள் மூவாயிரம் வருஷகாலமாய் சர்வ ஜீவராசிகளுக்கும் கருணை, ஈகை, சாந்தம் முதலிய வார்த்தையை அன்பால் பேசி, அரவணைத்து மயில் இறகால்துடைத்து, ஞானப்பால் கொடுத்து, நல்லொழுக்கமூட்டி, நற்குணம் ஏற்று எமனை வோட்டி, கையிலங்கிரிக்கு வழிகாட்டி மக்களுக்கு நல்ல நிலைமையை உண்டாக்கினார்.
கோள் பிறந்த நாட்டில் கோமாளியும் பிறந்தது போல் சம்பந்தர் பிறந்து மதுரைமாநகருக்கு இத்திருக்கூட்டம் வந்து, ஆடம்பரமாய் இருந்து சமணர்களுக்கு எதிராக பொறாமை பேதகமாய் நடந்து, திருவிளையாடல் செய்து தேவாரம், திருவாசகம் பல ஏடுகள் இயற்றியிருப்பதால் இத்திருமங்கலம் ஸ்ரீ பத்ரகாளி மாரியம்மன் மகா உற்சவத்தில் ஆறாம் நாள் கழுவேற்றயாகத்தில் சம்பந்த மூர்த்திகளும், சமணாசிரியர்களும் தர்க்க வாதம் பேசி வேத சாஸ்திரம் போட்டி நடைபெறுகிற படியால் ஜனங்கள் யாபேரும் சாந்தமாய் இருந்து, சரித்திரம் தெரிந்து, நியாயமானதை அறிந்து இல்லறத்துறவு என்பதனை நிதானித்து நியாயங்களை புகழ்வீர்கள் என மகாகுருவை வணங்கி மகிழ்கிறோம்.

பாண்டிய நாட்டில் சமண மதம் நன்றாகவே வாழ்ந்து வந்த சமயத்தில் சோழ நாட்டில் இருந்து வந்த சம்பந்த மூர்த்தி திருக்கூட்டம் ஆற்றுக்கு அக்கரையில் காவிக் கூடாரம் அடித்து சமணர்க்கு எதிராக நின்றனர். சமண மதத்தை அடியோடு அழிக்க எண்ணங் கொண்டவராய் அக்கினிக்குண்டம், ஓமக்குண்டம், நெய்குண்டம் ஆகிய ஆராதனைகளாலும் மந்திரங்களாலும் வஞ்சனை, பில்லி, வைப்புச்சாவல்களாலும், மாயா ஜோதி வேஷங்களாலும் அத்திராத்தி என்ற மந்திரத்தை இகழ்ச்சியாகப் பேசி, சமணர்களை கவுணர்கள் எனச் சொல்லி ஆபத்து உண்டாக்கி உடம்பிலே அக்கினி உண்டாக்கி, அருகன் வேதம் நீக்கி அவர்களுடைய வேதங்களைத் தழுவச் சொன்னதால் நாங்கள் உங்கள் மதத்தில் சேரமாட்டோம் என்றும், பகவான் அருகனே எங்கும் சமதர்மக் கொள்கையே என்றோம். ஆனால் மங்கையர்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாரும் மன்னர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்; மந்திரத்தாலும் மயிற் பீலிகையாலும் குணமாக்க வேண்டினர். அதற்கு நாங்கள் சொன்னதாவது: அங்வானி மூர்த்தியோ நரியைப் பரியாக்கி நாமுகனே எமனாக்கி நாயகனே பேயன் ஆக்கிய வஞ்சக மூர்த்திகளைக் கண்ணால் கண்டால் 8 நாள் தோசம், காதாரக் கேட்டால் 16 நாள் விரதம். அவாள் மந்திரஞ் செய்து, அக்கினியை ஏவி மடத்தில் தீ வைத்ததாகச் சொல்வதோ தன் மனம் தன்னைச் சுடும் தவறிய குணம் வீட்டைச் சுடுவது போல் பேசுகிறார்கள். எங்கள் மதம்சாரா சீனா, ஜப்பான், பர்மா, முதலான தீவுகளில் பாண்டிய மன்னர் அரியணை ஏறி அறக்கொடி ஏற்றி அரவணைத்து சேர, சோழ மகா அரசர்களையும் ஜெயித்து, கூன்பாண் டியன் அரசு புரியும் பாண்டிய நாட்டைப் பிரிக்க சூழ்ச்சி செய்கின்றனர். இக்காலத்தில் சம்பந்தமூர்த்தியிடம் சமணர்கள் தர்க்கவாதம் சொல்வதோ நீதிக்கு விரோதம். பாண்டிய தேசத்தைக் கைப்பற்ற எண்ணிக் கொண்டு கெட்ட எண்ணத்துடன் சமண மதக் கொள்கையை எதிர்க்கும் சம்பந்தமூர்த்தி திருக்கூட்டத்திற்குத் புரியும் பட்சத்தில் தாம் ஒன்றும் செய்வதற்கில்லை; ஒன்றும் செய்ய இயலாது என்றும் சம்பந்தரைக் கழுவில் ஏற்ற அரசர் உத்தரவு இடுவார்கள் ஆனால் பாண்டிய ராஜாவை எழுப்பித் தருவோம் எனக் கூறினோம்.

திருக்கூட்டமாகிய பாலர்களோ பதை பதைத்து முழி முழித்து தூங்கிக் கொண்டிருந்தபடியால் மகாராஜாவின் வேண்டுகோளால் இரு பேர்களுமே இருந்து சுரமது போக்கிச் சுகமாக்கி, அரசாட்சி செங்கோல் நடத்தி வந்தார். மங்கையர்க்கரசியாரும், மந்திரிமார்களும் சூழ்ச்சி செய்து சம்பந்தமூர்த்தியை அலங்கிருதம் உண்டு பண்ணி தண்டிகைபல்லாக்கு மேலே ஏற்றி படாடோபமாய், ஆடம்பரமாய் ஊர் கோலஞ் சுற்றி வந்தபோது சமணர்களா குல குருவாகவும், மன்னர்க்கு மகா முனிவராகவும், மற்ற மானிடர்களுக்குச் சமணாசிரியர் ஆகவும் இருக்கும் பொழுது நீங்கள் வெற்றிக்கொடி நாட்டி வரும் பயங் கொள்ளித்தனமல்லவா என்று சொன்னோம். ராஜா சமணர்களை ஆதரிக்க அரசியாரும் மந்திரி குலச்சிறை யாரும் சம்பந்தமூர்த்தி திருக்கூட்டத்தினை ஆதரிக்க ஆரம்பித்தனர். இரு தலைவர்களின் வாதங்களும் அதிகரித்தன.

இருவருடைய ஏடுகளையும் நெருப்பில் போட்டு, யாருடைய ஏடு எரியாமல் உள்ளதோ அந்த ஏட்டிற்கு உரியவர்களே வென்றதாகக் கூறுவார்கள். ஆனால் சமணர்களாகிய நாங்கள் இயற்கையினை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை.
இறுதியில் போட்டியிட மறந்து எங்களுடைய ஏடு எரியும் நெருப்பினில் இட்டோம். எங்களுடைய ஏடு இயற்கை நீதிகளுக்கு ஒப்ப தீயில் எரிந்தது. எங்க ளுடைய ஏடு எரிந்த அந்தச் சாம்பலை எடுத்து சம்பந்த மூர்த்தி திருக்கூட்டம் பூசியதோடு அவருடைய ஏட்டில் பூசி அவர்களுடைய ஏட்டை நெருப்பில் இட்டார்கள். ஏடு எரியவில்லை. எங்களுடைய ஏட்டின் சாம்பலை அவர் களுடைய ஏட்டில் பூசியதால்தான் ஏடு எரியவில்லை என்று கூறினோம் அவர்கள் நம்பவில்லை.

மூன்றாவது போட்டியாக இருவருடைய ஏட்டையும் ஆற்றில்போட்டு எந்த ஏடு ஆற்றின் நீரை எதிர்த்துச் செல்கின்றதோ அந்த ஏட்டிற்குரியவரே வென்றனர் எனக் கூறினர். நாங்கள் இப்போட்டிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இயற்கை நீதியை எதிர்த்து எங்கள் ஏடு ஆற்றின் நீரை எதிர்த்துச் செல்லாது எனக் கூறினோம். அவர்கள் ஏற்கவில்லை.

ஏடுகள் இரு பேரும் ஆற்றிலே போடவும் ஏதுவாய் காந்தக் கல் பூசியே போடவும் கோபமாகவே சமணர்கள் வாடவும் ஏற்றிய சக்திகள் முத்தமிழ் பாடவும் இருவ ருடைய ஏடும் வைகையாற்றில் போடப்பட்டது. எங்க ளுடைய ஏடு இயற்கை நீதிகளுக்கு உட்பட்டு ஆற்று நீரோடு சேர்ந்து கிழக்கு நோக்கிச் சென்றது. அவர் களுடைய ஏடு ஆற்று நீரை எதிர்த்து மேற்கு நோக்கிச் சென்றதாகக் கூறி மந்திரி குதிரை மீது ஏறி திருவேடகம் சென்று ஏடு எடுத்து வந்தார்.

இவ்வாறு அனல்வாதம், புனல்வாதம் முடிந்து சமணர்கள் தோற்றதாகக் கூறிக் கழுவேற்றுதல் நடைபெறும். கழுவேற்று தல் என்பது சவுக்குக் கட்டைகளை கட்டப்பட்டிருக்கும். சமணர்கள் அதில் ஏறி உட்கார்ந்து கையில் துணியால் தைத்த சிறு நாக்கு போன்ற ஒன்றை வாயில் திணிப்பார்கள். இந்த வேடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்றாலும், இளம் வயதில் ஆரிய சூழ்ச்சியையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்குக் கிடையாது. வேடிக்கை பார்ப்பதோடு சரி.

திருமயிலைக் கபாலீச்சரம் திருக் கோயிலில் கபாலீச்சுரர் சன்னிதி நுழை யும் வாயிலருகில் காசி மடம் குமர குருபர சுவாமிகள் கல்லில் திருஞான சம்பந்தர் பாடிய அங்கம் பூம்பாவாய் பாடல் செதுக்கி வைத்துள்ளதைக் காண்பது உண்டு. அதுபோல் மேற்கு வாயில் அரு கில் திருஞானசம்பந்தர் சாம்பலிலிருந்து எழுப்பிய பூம்பாவைக்கு ஒரு சிறிய சன்னிதி சில ஆண்டுகளுக்குள் எழுப்பி யது கொடி மரத்தின் எதிரே காணப் படுகிறது.

இவற்றைக் காணும்போதும், தேவாரப் பாடல்களை ஆராயும்போதும் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்துத் தேவாரப் பாடல்களில் குறிப் புகள் ஏதும், அங்கம் பூம்பாவையை எழுப் பியது உட்படச் சான்றுகள் இல்லாமை யைக் கண்ணுற நேர்ந்தது.

அப்படியானால் திருஞானம்சம்பந்தர் இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த் தினார் எனும் கற்பனைக் கதை பரவியது எப்படி? மறைந்த பேராசிரியர் என் அன்பு நண்பர் கு. நம்பி ஆரூரன் தம்முடைய எம்.லிட் பட்ட ஆய்விற்காகப் பெரிய புராணம் கூறும் சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகள் எனும் ஆய்வினை மேற் கொண்டு ஆய்வேட்டினை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் அளித்துள்ளார். அடுத்து பேராசிரியர் இராசமாணிக் கனார் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலினை எழுதியுள்ளார்.

மேலும் பல்லவர் வரலாறு எனும் அவர்தம் நூலில் சுந்தரர் வழக்கு குறித்துப் பெரிய புராணம் கூறுவனவற்றை எடுத்துக் கூறியிருந்தார். எனவே பெரிய புராணம்தான் இவ்வா றான அற்புதங்கள் செய்தார் எனும் கற் பனைச் செய்தி பரவியதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது.

புராணங்கள் - அவை கந்தபுராணமா யினும் சரி, சேக்கிழாரின் பெரியபுராண மானலும் சரி, அவை கற்பனையே என்ப தோடு மிகைப்படுத்தப்பட்ட - இன்னும் சொல்லப் போனால் புளுகுச் செய்தி களுக்குத் தமிழ்ப் புனுகு சாத்தப்பட் டவையே.

சேக்கிழாரின் தமிழைப் போற்றுகி றோம். சேக்கிழார் தமிழர் என்பதால், ஆரியப் புலவர் அல்லர் என்பதால் மதிக் கிறோம். போற்றவும்கூட செய்கிறோம் ஆனால் இதுபோன்ற கற்பனைக் கதையை உலவவிட்டதை ஏற்கவியலாது என்பது பகுத்தறிவாளர் கருத்து. அது கம்பரின் இராமாயணத்திற்குக் கூறப்பட்ட எதிர்ப்புப் போலவே பெரியபுராணத்திற்கும் கூறப்படும் எதிர்ப்பு, மறுப்பு எல்லாம் ஆகும்.

வைணவத்திற்குக் கற்பனை வழங் கியவன் கம்பன். அதே காலகட்டத்தில் சைவத்திற்குக் கற்பனை வழங்கியவர் சேக்கிழார்.

இந்நிலையில் 1929இல் இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்குமுன் இராசரத் தினம் என்பவர் எழுதிய பெரிய புராணம் கூறிய, தேவாரத்தில் இல்லாத கற்பனை கள், கப்சாக்கள் குறித்த செய்திகள் காணப்பட்டன.

அதுவே மேலும் நம் ஆர்வத்தைத் தூண்டி திருஞானசம்பந் தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்பவை யெல்லாம் கற்பனையே, சேக்கிழார் பக்தியை வளர்க்க, தம் பக்திப் பெருமையை வெளிக்காட்ட தெய்வப் புலவர் என்று அழைக்கத்தக்க அளவில் பல கற்பனை, புளுகுகள், நம்ப முடியாத வற்றை எழுதி வைத்துவிட்டார்.

நல்ல வேளையாகத் தேவாரப் பாடல் கள் இராஜராஜசோழன் முயற்சியால் கிடைத்துள்ளன. அவற்றில் திருஞான சம்பந்தர் அற்புதங்கள் செய்தார் என்று காட்டுவதாக இல்லை. இன்னும் ஆலயங் கள் சென்று வருகின்ற என்போன்ற ஆய்வாளர்கள் அவற்றை எடுத்துக் காட்டிட வேண்டும்.

எனவே பக்தி மடம் கொண்டவர்கள் எங்களைப் போன்றவர்களைக் கட்டுச் சோற்றுக்குள் எலி என்று எண்ணிக் கொண்டாலும் சரி, கலைஞர் பராசக்தி யில் கூறியதுபோல் பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது. உண்மையான பக்தி பலன் கருதாப் பக்தியாக மறைமலையடிகள், திரு.வி.க. காட்டிய வழியில் அமைதல் வேண்டும்.

பெரிய புராணமும் - தேவாரமும்

தமிழ் வேதம் என்று சொல்லப்பட்ட தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் மூவர் - திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரமூர்த்தி. இவர்கள் மூவரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் அடங்குவர். இவர்களைக் குறித்துக் கூறவந்த பெரிய புராணம் இவர்கள் மூவருமே அற்புதங்கள் நிகழ்த்தினர் என்று கூறுகிறது.

இக்கூற்றுகளுக்குச் சான்றாக காலத் தால் முந்திய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எந்தத் தேவாரப் பாடல்களிலும் கிடைக்கவில்லை. சேக்கிழார், தேவாரப் பாடல்கள் தோன்றிய சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப்பின் குன்றத்தூரில் பிறந்து சிதம்பரத்தில் பெரிய புராணம் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பெரிய புராணம் இயற்றுகையில் நாட்டில் வழங்கும் கதைகளைக் கொண் டும், தேவாரப் பாடல்களில் வழங்கும் சில சொற்களின் போக்கைக் கொண்டும், சேக்கிழார் திரிபுணர்வினால் - மூவர்கள் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுகின்றனர்.

இதே போன்று எந்நாட்டிலும் பெரியோராயிருந்தோர்களை, பிற்காலத் தவர் சிறப்பாகக் கொள்ளுமாறு, அவரைப் புகழ்ந்தோரும், சார்ந்தோரும் மிகைப்படக் கூறி, அவதார புருஷர் களாக ஆக்குவது வழக்கமாகக் காணப் படுகிறது.

அவ்வாறே உலகத்திற்கு நீதி போதிக்க வந்த யேசு கிறித்துவை பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறு வதும் ஏற்றதே.

ஏன், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலையுரைத்த கற்பனை யெல்லாம் மண் மூடிப் போக என்று பாடிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகள் அற்புதங்கள் செய்ததாகச் சில ரும், அதை மறுக்கப் பலரும் தோன்றி யதும், வழக்காடியதும் நிகழ்ந்துள்ளன.

தந்தை பெரியார் இராமலிங்கர் பொன் மொழிகள் என்று விடுதலையில் ஒரு பக்கத்திற்கும் மேலாகத் தொகுத்து கட்டுரை ஒன்று வரைந்துள்ளார். இராமலிங்கர் பொன்மொழிகளை பெரியார் தொகுத்துக் கூறியதன் நோக்கம் - பொய் தோன்றிய காலத்துச் செல்வாக்குப் பெறவில்லையென்ற போதிலும், மேலும் மேலும் வற்புறுத்திக் கூறுவதினாலும், நாளடைவில் அதனை மறுப்பவரின்றி மெய்யாக ஆகிவிடக் கூடாது என்பதால்தான்.

பின்வருவோர் பொய்யை ஏட்டில், எழுத்தில் கண்டால் கடவுள் வாக்கு அது; என்றும் மாறாத சத்தியம், உண்மை என்று எண்ணி மயங்கிட நேரிடுகிறது. மூவர் செய்த அற்புதங்கள் எல்லாம் அவ்வாறேதான் மாறியுள்ளன. இதுபோல் வைணத்தில் அதிகமில்லையெனினும் பன்னிரு ஆழ்வார்களில் ஓரிருவர் இதுபோல் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அல்லது அவர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது

திருஞானசம்பந்தரின் புராணத்தை - வாழ்க்கை வரலாறை அல்ல - ஆராய்ந் தால் இவர் சீர்காழிப் பதியிலே, அரிய தவங்கிடந்த   தாய் தந்தையர்க்குப் பிறந்தவர். எதற்குத் தவங் கிடந்தார் களாம்? தமிழ்நாடெங்கனும் தங்கள் அன்பு மதமாகிய, ஆரியத்திற்கு எதிரான, வேத நெறிக்கு எதிரான சமணமும், பவுத்தமும் தங்கள் கடைமார்க்கமாகிய  ஆருகதமும், பவுத்தமும் போதித்து வர, சற்சமயமான சைவ சமயம் கருகி  ஆருகத மும், வருவதைச் சிந்தையிற் கொண்டு அதைத் தூக்கி நிறுத்தி, ஆருகதமும், பவுத்தமும் அழியத் தவங் கிடந்து ஒரு புதல்வரைப் பெற்றார்களாம்.

கருவில் இருக்கும் குழந்தை தாய், தந்தையர் எண்ணும் எண்ணத்தையே உருக் கொண்டு பிறக்கும் என்பது மருத்துவ நூல் வல்லார் - மருத்துவ அறிவியலார் கண்ட உண்மை. அவ்வாறே சமணரையும், பவுத்தரையும் அழிக்கத் தவங் கிடந்து பிறந்த திருஞானசம்பந்தர் பிற்காலத்தே எவ்வாறு எண்ணாயிரம் சமணரைக் கழுவிலேற்றக் காரணமானார் என்பதைப் புராணம் அறிந்தவர் அறிவர்.

இந்தக் குழந்தை மூன்று வயதிலே குளக்கரையிலே தன் தந்தையைக் காணாது அழ, சிவனும், உமையவளும் விண்ணில் தோன்றி அழும் குழந்தையை ஓயப்பண்ண, பொற்கிண்ணத்தில்   குழந்தைக்குப் பால் கொடுத்தபோது அழுகை தீர்ந்தது. வாயில் பால் ஒழுகி யது. லட்சோப லட்சம் ஏழைக் குழந்தைகள் பாலுக்கு ஏங்கி அழுகையில் வராத உமை - இந்தக் குழந்தை அழுதபோதுமட்டும் வந்தது எப்படி? ஏன்? என்று பகுத்தறி வாளர் வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும்.

புராணத்திற்கு வருவோம். தந்தை குழந்தை வாயில் பால் ஒழுகுவதைக் கண்டார். ஏதெனக் கேட்டார். குழந்தை விண்ணை நோக்கி உமையையும், சிவனையும் காட்டி, தோடுடைய செவி யன் என்ற பதிகம் பாடியது என்றிருக் கிறது. புராணத்தில் ஞானப் பாலுண்டதி னால் ஞான சம்பந்தன் என்று பெயர் வழங்கிற்று என்கிறது புராணம். இங்கே தான் நம்  புலவர் சேக்கிழாரின் புலமை  வெளிப்படுகிறது - கற்பனைக் கருவூலம் திறக்கிறது.

புராணத்தில், குழந்தை பிறந்த சில  நாளிலேயே அதற்குப் பெயர் சூட்டப்பட்ட தாகக் கூறப்பட்டு இருக்கிறது. என்ன பெயர் என்று குறிப்பிடவில்லை. மூன்று வயது வரை பிள்ளைக்குப் பேர் வைக் காமல் இருந்திருக்க மாட்டார் - அந்தப் பிள்ளையின் தந்தை சிவபாதஇருதயர்.

தவங்கிடந்து பிறந்த பிள்ளையாத லால் ஞானசம்பந்தன் என்றே அவரும் பெயரிட்டு இருக்கவேண்டும்.

ஆனால், சேக்கிழார் முன்பு அமைந்த பெயரைக் கொண்டும்,
பொற்கிண்ணத்து அடிசில்
பொய்வதென தாதையர் முனிவுற

என தம் பதிகத்தை ஆதாரமாகக் கொண்டும், உமை தந்த பாலை உண்ட தாகவும், அதனாலே ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றதாகவும் சேக்கிழார் பாடிவிட்டார்.

ஆனால், பாலுண்டமைக்குக் கோபித்த தன் தகப்பனைப் பார்த்து முதன்முதலில் பாடிய பதிகத்தின் இறுதி யிலேயே தன்னை ஞானசம்பந்தன் என்று பாடி இருக்கிறார். ஆகவே ஞானசம்பந் தன் என்பது ஞானம் பெற்றதனால், ஞானப்பால் அருந்தியதால் பெற்ற பெயர் அல்ல. அதாவது இடு குறிப்பெயரே யன்றிக் காரணப் பெயரன்று.

பரமசிவன் பொற்றாளம் கொடுத்தாரா?

கையினால் தாளம் போட்டுப் பாடி வந்த ஞானசம்பந்தருக்கு சிவபெருமான், பஞ்சாட்சரம் அதாவது நவசிவாய என்ற எழுத்து எழுதப் பெற்ற பொன்னால் செய்யப்பட்ட தாளம் கொடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் எதிலுமோ, அல்லது வேறு எவரேனும் பாடிய பாடலிலோ அதுபோன்ற தகவல், பாடல் ஏதும் கிடையாது. தாளத்தை யாராவது எடுத்து வந்து கையில் போடாமல், ஆகாய மார்க்கமாய் வந்து கையில் தாளம் தந்தது என்று சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அதுபோல் இறைவன் தாளம் தந்தார் என்று சொல்வது இறைவனை மாஜிக் செய்பவர் போல் ஆக்குவது ஆகும். இறைவன் என்ன,  தந்திர வித்தைக்காரரா? என்று கேட்க விரும்புகிறோம்.

தோளில் சுமந்து சென்றாரா?

திருஞானசம்பந்தரை அவருடைய தந்தை சிவபாத இருதயர் தோளில் சுமந்து ஊர் ஊராகக் கொண்டு சென் றார் என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் தேவாரத்திலோ இவ்வாறான செய்திக்கு ஆதாரம் ஏது மில்லை. சிவபெருமான் முத்துச் சிவிகை, முத்துச் சின்னங்கள், முத்துக் குடை கொடுத்தாரா?

ஞானசம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது  சிறுபிள்ளை நடந்து வருவதைக் காணப் பொறுக்காமல் முத்துச் சிவிகையும், முத்துச் சின்னங் களும், முத்துக்குடையும் கொடுத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

பார்ப்பனர்களின் சூழ்ச்சி இதில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. கோயிலிற் கிடந்த பல்லக்கு, குடை முத லியவற்றை எடுத்து வந்து  ஞானசம்பந்த ருக்குச் சிறப்புகளைச் செய்துவிட்டு, இவற்றைக் கடவுள் கட்டளை செய்தார் என்றனர். கடவுள் அந்தத் தலத்திலுள்ள எல்லாப் பிராமணர்களுக்கும் கனவில் தோன்றி இவ்வாறு செய்யுமாறு கட்டளை செய்தாராம். இது புராணக் கூத்து. பிராமணருக்கு மட்டும் ஏன் கடவுள் கனவில் தோன்ற வேண்டும். பிராமண ரல்லாத சிவனடியார் கனவில் ஏன் தோன்றவில்லை? எனவேதான் இது பார்ப்பனச் சூழ்ச்சி எனப்படுகிறது.

சமண சமயம் எங்கும் பரவியிருந்தது. இச்சமயத்தின் கோட்பாடு உயர்வு, தாழ்வு பாராட்டாதாம். இச்சமயத்தின் செல்வாக் கினால் பார்ப்பனர் தம் குலப் பெருமையை இழந்திருந்தனர். இதனைப் பெற வேண்டு மானால் ஜாதியிறுமாப்பைப் பெற வேண் டும். அதற்குத் தகுதி வாய்ந்த சமயம் சைவ சமயம். அச்சமயம் பரவ வேண்டு மானால் கடவுள் ஞான சம்பந்தருக்குப் பல்லக்கு, குடை முதலியன கொடுத்தார் என்றால் நம் மக்கள்தான் எதையும் சமயத்தின் பேரால், கடவுள் பேரால் கேள்வி கேட்காமல் நம்பிவிடும் அப்பாவி களாயிற்றே. சைவ சமயப் பற்றினால் ஏற்பர்.

சைவ சமயமும் பரவ வசதியாக இருக்கும். சேக்கிழார் இப்படிப் புராணம் எழுதி வைத்துவிட்டார். இதில் இன் னொரு வேடிக்கை - சிவிகை அதாவது பல்லக்கு, குடை முதலியன கோயிலைச் சார்ந்தவையல்ல. திடீரென்று கோயிலில் இருக்கக் கண்டனராம். இவ்வாறு இயற்கைக்கு விரோதமாக நடக்குமா?

கொல்லி மழவன் மகள் நோய் தீர்த்த விவகாரம்

கொல்லிமழவன் என்னும் அரசன் மகள் முயலகன் என்னும் நோயினால் வருந்தியிருந்தாள். இவர் அவளுடைய அந்நோயைத் தீர்த்து இன்னொரு அற்புதமும் செய்ததாகக் கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத் திலே மங்கையை வாடமயல் செய்வதோ விவர் மாண்பே என்று கூறுகிறாரே ஒழிய தீர்ந்ததாகப் பாடக் காணோம். தம்முடைய பதிகத்தின் இறுதியில் இந்தப் பதிகத்தைப் பாடுவோர் நோயி னின்றும் நீங்குவர் என்றுதான் முடிக் கிறார். ஆனால் சேக்கிழார் கொல்லி மழவன் மகள் நோய் நீங்கித் தந்தையின் பக்கம் வந்து நின்றாள் என்கிறார்.

திருநீலகண்டப் பதிகமும்- குளிர் சுரமும்

திருஞானசம்பந்தர் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குச் சென்றிருந்த போது அங்குக் குளிரால் யாவரும் வாட, அவர் திருநீலகண்டப் பதிகம் பாடி அனைவருக்கும் குளிர் சுரத்தை அகற்றினார் என்று கூறப்படுகிறது.

ஆனால் திருநீலகண்டப் பதிகத்தில் குளிரைப் பற்றியாவது அக்குளிரினால் ஏற்பட்ட சுரத்தைப் பற்றியாவது ஒரு குறிப்பும் காணோம். இப்படியே முத்துப் பந்தர் இடப்பட்டதாகவும், பொன்னுல வாக்கிழி பெற்றதாகவும் ஆதார மில்லாமல் கூறப்பட்டுள்ளது.

செட்டி மகளை எழுப்பியது

திருஞானசம்பந்தர் பாடிய பாடல் களில் செட்டி மகள் படும் மெலிவு தகுமோ என்று கூறுகிறாரே ஒழிய, செட்டி உயிர் பெற்று எழுந்திருந்தார் என்றோ, உயிர் பெற்று எழுந்தார் என்றோ தேவாரத்தில் எங்கும் கூறக் காணோம். தேவாரத்தில் எப்படிக் கூறாமல் விட்டிருப்பார்?

அப்பரை திருஞானசம்பந்தர் சந்தித்தாரா?

ஞானசம்பந்தர் அப்பரைச் சந்தித் தார் பல தடவை என்று கூறுவர். அது மட்டுமல்லாது வேளாளரான அப்பரை, பார்ப்பனரான ஞானசம்பந்தர் அப்பரே அதாவது அப்பா என்று அழைத்தார். ஜாதி வேற்றுமை பாராட்டாதவர் என்றும் கூறுவது உண்டு.

ஆனால் ஞானசம்பந்தர் தேவாரத் திலாவது, அப்பரின் தேவாரத்திலாவது இருவரும் சந்தித்தார்கள் என்பதற்கான குறிப்பு ஏதும் காணோம். அப்பர் தேவாரத்தில் மட்டும் திறக்கப்பாடியவர் என்றும், அடைக்கப்பாடியவர் என்றும் குறிப்புக் காணப்படுகிறது.

திருமறைக் காட்டிலே கோயிற் கதவை திறந்தமையைப் பற்றி சிறப்பித் துக் கூறப்பட்டிருக்கிறது. திறப்பித்தது அப்பர். அவருடைய பாட்டுகளில் கதவின் வலியை நீக்குமே என்று பத்து பாட்டுகளிலும் கூறுகிறாரேயொழிய வேறு ஒன்றுமில்லை.

சமண சமயம் செல்வாக்குடன் இருந்த காலத்தில் பூசையில்லாமையால் கதவு சாத்தப்பட்டிருந்தது. பூட்டப்பட்ட தாள் திறக்காமையினால் கதவு துரு ஏறிக் கிடந்ததைத் திறந்து கோயில் புகுகின்ற திறப்பு விழாவின் போது கடவுளை நோக்கிப் பாடியவையே திறக்கப் பாடியவை எனலாம்.

பார்ப்பனர்கள் ஞானசம்பந்தர் காலத்தும் ஜாதி உயர்வு பாராட்டியுள்ள னர். பெரிய புராணத்திலே திருவீழி மிழலைப் பார்ப்பனர்கள், சீர்காழிப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து நடத்தினர் எனவும், அத்தலத்திலே இருந்த அப்பருக்கும் அவருடனிருந்த வர்களுக்கும் விருந்து நடத்தியதாக யாதொரு குறிப்பும் இல்லை. இனி அனல் வாதம், புனல்வாதம் உண்மையா என்று காண்போம்.

http://viduthalai.in/new/home/archive/2859.html
http://viduthalai.in/new/home/archive/2939.html
http://viduthalai.in/new/page-2/3082.html