Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts
Thursday, November 4, 2010
அர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக!
கவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார் அவரது அர்த்தமுள்ள இந்து மதம் வாழ்க்கை நெறிமுறை களை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால், அந்த நூலை பல்கலைக் கழகங் களில் பாட நூலாக்கியி ருப்பேன்.
- (தினமலர், 28.10.2010)
என்று கவிஞர் வாலி கூறி யுள்ளார்)
கண்ணதாசன் எவ்வ ளவோ பாடல்களை எழுதிய வர்தான். அர்த்தமுள்ள இந்து மதத்தைப்பற்றி மட்டும்தானா எழுதினார்? அர்த்தமற்ற இந்து மதத்தையும் குடைந்து எடுத்துத் தள்ளியுள்ளாரே!
ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னியத் தாயக
எல்லை தொட்டனர்
மஞ்சள் மேனியும்
வஞ்சக நெஞ்சமும்
மானமென்னும் ஓர்
எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும்
கொண்டவர் - தமிழ்க்
கோட்டை வாசற்படியை
மிதித்தனர்
சொந்தமாக ஓர்
நாடில்லாதவர்
தொட்ட பூமியில்
சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடும் தன்
சொந்த நாடென
ஏற்று மாந்தரை
மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ
தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ
துளியும் இன்மையாம்
வித்தை யாவையும்
சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்
வேறு என் சொல!
நச்சரவுகள் மனித
மேனியில்
நடமிடும் கதை
இவர்கள் கதையாம்
அச்சமிக்கவர் கோழையர்;
ஆயினும்
அடுத்து வீழ்த்திடும்
திறமை மிக்கவர்!
(கண்ணதாசன் கவிதைகள், பக்கம் 162-163).
என்றெல்லாம் விலாவாரி யாக ஆரியப் பார்ப்பனர் கள்பற்றி எழுதி இருக்கிறார் - முடிந்தால் கவிஞர் வாலி இதனையும் பல்கலைக் கழ கங்களில் வைத்திட சிபாரிசு செய்யலாமே!
சூழ்ச்சி வென்றது!
நாடு காய்ந்ததே!
கடவுள் வாசலை
காத்தனர் ஆரியர்
வீரம் முற்றும்
ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர்
சாத்திரத்
தீக்குழியிடைச்
சாய்ந்தனர் தென்னவர்
என்று முழங்கினார் கண்ணதாசன்.
இன்னும் அந்த நிலை இருப்பதை கவிஞர் வாலிகள் மறுக்க முடியுமா?
கடவுள் வாசலைக் காக் கும் வேலையில் உள்ளவர் கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று சட்டம் செய் தால், அதனைத் தடுத்து நிறுத்திட உச்சநீதிமன்றம் வரை சென்று கொண்டு தானே இருக்கிறார்கள்?
கேட்டால் இதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கூறுவார்கள். அந்த அர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக! - மயிலாடன்
Wednesday, November 3, 2010
என்ன, தினமலரே, தினமணியே, இந்து வகையறாக்களே சங்கர மடங்களே, தயார், தயார்தானா?
தயார், தயார் தானா?
தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: ஒருவரைப் பார்த்து, நீ யார் என்று கேட்டால், எத்தனை பேர், தமிழன் என்று சொல்கிறோம்? முதலியார், யாதவர், பிராமணர், வன்னியர், தேவர், நாயுடு, செட்டியார் என்றோதானே சொல்கிறோம். இது மாறவேண்டும்; நாம், தமிழர்கள் என்று சொல்லவேண்டும்.
டவுட் தனபாலு: அப்படியா...? ரொம்ப நல்ல நோக்கமா இருக்கே... கல்வி நிலையங்கலயும், அரசு நிர்வாகத்துலயும் கேட்குற சான்றிதழ்கள்ல, எந்த ஜாதியையும் குறிப்பிடாமல், தமிழர்னு குறிப்பிட்டா சலுகை வழங்குவீங்களா? ஜாதியைச் சொன்னா சலுகை வழங்குறீங்களா?
தினமலர், 3.11.2010
பார்ப்பனர்கள் அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் அடிமடியில் கைவைத்துவிடுவார்கள் - அந்த அடிமடிதான் இட ஒதுக்கீடு.
இட ஒதுக்கீட்டிற்காக ஜாதி கேட்பதை நிறுத்திவிடலாமே - அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை.
எப்பொழுது?
தினமலர் கூட்டம் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் நடத்தி பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே, அதை நிறுத்தும்போது -
சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் மடாதிபதியாக வரும் காலம்தான் உண்மையான சுதந்திரம் வந்த காலம் என்று காகாகலேல்கர் கூறியுள்ளாரே - அது நடைமுறைக்கு வரும்போது -
ஜாதியை, வருண தர்மத்தை வலியுறுத்தும் கீதை, இராமாயணம், வேதம், மனுதர்ம சாஸ்திரங்களை பொது இடத்தில் கொளுத்தி, அவற்றின் சாம்பலைக் கூவத்தில் தூக்கி எறிய சங்கராச்சாரியார் தலைமையில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடும்போது -
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைக் காப்பாற்ற இரும்புக் கூண்டு செய்து வைத்துள்ளார்களே, அந்தப் பிரிவை நீக்கிட பார்ப்பனர்களே முயற்சிக்கும் போது - (இந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தைத்தான் தந்தை பெரியார் அறிவித்தார். 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தை எரித்து மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அனுபவித்தனர்).
நூற்றுக்கு மூன்றே சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் எங்களுக்கு இந்த அளவுக்கு மட்டும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடங்கள் அளித்தால் போதும் என்று பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பகிரங்கமாக அறிவிக்கும்போது -
இவைகளை வெளிப்படையாக, எள்மூக்கு முனை அளவுக்குக்கூட சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் செயல்படுத்திக் காட்டினால்,இட ஒதுக்கீட்டுக்காக - ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக இப்பொழுது நடைமுறையில் இருந்துவரும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு மூடு விழா செய்யப்படும். இந்தக் கண்ணோட்டத்தில் கேட்கப்படும் ஜாதிபற்றிய குறிப்பும் கேட்கப்படுவது நிறுத்தப்படும்.
என்ன, தினமலரே,
தினமணியே,
இந்து
வகையறாக்களே
சங்கர மடங்களே,
தயார், தயார்தானா?
- கருஞ்சட்டை -
தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: ஒருவரைப் பார்த்து, நீ யார் என்று கேட்டால், எத்தனை பேர், தமிழன் என்று சொல்கிறோம்? முதலியார், யாதவர், பிராமணர், வன்னியர், தேவர், நாயுடு, செட்டியார் என்றோதானே சொல்கிறோம். இது மாறவேண்டும்; நாம், தமிழர்கள் என்று சொல்லவேண்டும்.
டவுட் தனபாலு: அப்படியா...? ரொம்ப நல்ல நோக்கமா இருக்கே... கல்வி நிலையங்கலயும், அரசு நிர்வாகத்துலயும் கேட்குற சான்றிதழ்கள்ல, எந்த ஜாதியையும் குறிப்பிடாமல், தமிழர்னு குறிப்பிட்டா சலுகை வழங்குவீங்களா? ஜாதியைச் சொன்னா சலுகை வழங்குறீங்களா?
தினமலர், 3.11.2010
பார்ப்பனர்கள் அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் அடிமடியில் கைவைத்துவிடுவார்கள் - அந்த அடிமடிதான் இட ஒதுக்கீடு.
இட ஒதுக்கீட்டிற்காக ஜாதி கேட்பதை நிறுத்திவிடலாமே - அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை.
எப்பொழுது?
தினமலர் கூட்டம் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் நடத்தி பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்களே, அதை நிறுத்தும்போது -
சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் மடாதிபதியாக வரும் காலம்தான் உண்மையான சுதந்திரம் வந்த காலம் என்று காகாகலேல்கர் கூறியுள்ளாரே - அது நடைமுறைக்கு வரும்போது -
ஜாதியை, வருண தர்மத்தை வலியுறுத்தும் கீதை, இராமாயணம், வேதம், மனுதர்ம சாஸ்திரங்களை பொது இடத்தில் கொளுத்தி, அவற்றின் சாம்பலைக் கூவத்தில் தூக்கி எறிய சங்கராச்சாரியார் தலைமையில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடும்போது -
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைக் காப்பாற்ற இரும்புக் கூண்டு செய்து வைத்துள்ளார்களே, அந்தப் பிரிவை நீக்கிட பார்ப்பனர்களே முயற்சிக்கும் போது - (இந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தைத்தான் தந்தை பெரியார் அறிவித்தார். 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தை எரித்து மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அனுபவித்தனர்).
நூற்றுக்கு மூன்றே சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் எங்களுக்கு இந்த அளவுக்கு மட்டும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடங்கள் அளித்தால் போதும் என்று பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பகிரங்கமாக அறிவிக்கும்போது -
இவைகளை வெளிப்படையாக, எள்மூக்கு முனை அளவுக்குக்கூட சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் செயல்படுத்திக் காட்டினால்,இட ஒதுக்கீட்டுக்காக - ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக இப்பொழுது நடைமுறையில் இருந்துவரும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு மூடு விழா செய்யப்படும். இந்தக் கண்ணோட்டத்தில் கேட்கப்படும் ஜாதிபற்றிய குறிப்பும் கேட்கப்படுவது நிறுத்தப்படும்.
என்ன, தினமலரே,
தினமணியே,
இந்து
வகையறாக்களே
சங்கர மடங்களே,
தயார், தயார்தானா?
- கருஞ்சட்டை -
Subscribe to:
Posts (Atom)
