Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Tuesday, December 14, 2010

கல்கியின் பார்ப்பான் புத்தி

கல்கி போன்ற பார்ப் பன இதழ்கள் - நம் மக்கள் கல்வியில் வளர்ந்து வருவ தைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில் சில கீழறுப்பு வேலைகளைச் செய்வதாகத் தெரிகிறது.

பொதுவாகப் பக்தியைப் பரப்புவதேகூட தன்னம்பிக் கையைப் பறிமுதல் செய் வதற்குத்தான். நம்மால் முடியும் என்ற உறுதியைத் தகர்ப்பதுதான் அதன் உள் நோக்கமாகும். கடவுளை நம்பினால் போதும் - உழைக்க வேண்டாம் - கேட்டது கிடைக்கும் என்பது உருப்படுவதற்குச் சொல்லப்படும் வழியா?

சென்டிமென்ட் என்ற தலைப்பில் மக்கள் மத்தி யில் மூட நம்பிக்கைக் களை களைத் திணிப்பதில் அது இறங்கி இருப்பதன் நோக் கம் மிகவும் ஆபத்தானது.

பள்ளியிறுதித் தேர் வுக்கு முதல் நாள்வரை சுமார் 15 நாள்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக் கப்பட்டு படுத்த படுக்கை யில் இருந்தேன். படித்த பாடங்கள் எல்லாம் ஞாபக மில்லை. பள்ளியிறுதித் தேர்வு எழுத நான் புறப் பட்டபோது, காஞ்சிபுரத்தில் குடியிருக்கும் சித்தி விநாய கரைத் தரிசித்துவிட்டு பரீட்சை எழுதப் போகச் சொன்னார் என் அப்பா. நானும் அவ்வாறே சென் றேன். தேர்வு முடிவு வெளி வந்த அன்று முதலில் அவரை தரிசித்த பின்னர் தான் நாளிதழையும் பார்த் தேன். தேர்வில் வெற்றி பெற்றிருந்தேன் - என்று பொள்ளாச்சியிலிருந்து ஒரு மாணவர் எழுதியதாகக் கடிதம் ஒன்றை கல்கியில் வெளியிடப்பட்டது.

இப்படி வெளியிடப்படும் ஒவ்வொரு கடிதத்திற்கும் 50 ரூபாய் பரிசாம்.

கடுகளவு புத்தி உள்ள எவருக்கும் தெரியும்- படிக் காமல், முயற்சிகளை மேற் கொள்ளாமல் தேர்வில் வெற்றி பெற்று விடமுடி யாது.

அதுவும் இந்தப் பைய னுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து படித்ததெல் லாம் மறந்து போய்விட்ட தாம். சித்தி விநாயகரைக் கும்பிட்டவுடன் மறந்ததெல் லாம் நினைவுக்கு வந்து விட்டதா?

கேழ்வரகில் நெய் வடி கிறதாம் கையில் கிடைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கள், நிரப்பிக் கொண்டு போக லாம் என்று சொல்லும் ஏமாற்றுக்காரனுக்கும், அதை நம்பிக்கொண்டு பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் கேனையனுக்கும் - இந்தப் பக்திப் பிரச்சார ஆசாமி களுக்கும் என்ன வித்தி யாசம்?

எந்தப் பார்ப்பான் வீட் டுப் பிள்ளையும் இதனைச் செய்யப் போவதில்லை. அவங்கெல்லாம் சமத்தா படிச்சுண்டு வருவா.

இதை நம்பி நம் இனத் துப் பிள்ளைகள் படிப்பைக் கோட்டை விட்டு விடக் கூடாது. நம் மக்கள் படிக் காமல் பிள்ளையாரைக் கும்பிட்டு உருப்படாமல் போகவேண்டும் என்ற சூழ்ச்சிகூட இதில் இருக்க லாம் - எச்சரிக்கை!

- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101214/news01.html

Sunday, October 24, 2010

முட்டுக்கொடுக்கும் கல்கிகள்! - மின்சாரம்

கேள்வி: அயோத்தி தீர்ப்பின்மீது அப்பீல் செய்யாமல் இரு தரப்பினரும் நேரடியாகப் பேசினால், நிலையான தீர்வு உருவாகும் என்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாரே?

பதில்: தனது கருத்தைத் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இஸ்லாம் வாரியத் தலைவரை மடத்துக்கு வரவழைத்துப் பேச முற்பட்டிருக்கிறார். பேச்சு வார்த்தை என்றால் ஒரு தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும். இன்றைய சூழலில் இது புதிய சிக்கல்களை உருவாக்கக் கூடும். மக்கள் ஏற்றுள்ள தீர்ப்பை மேல் முறையீடின்றித் தலைவர்களும் ஏற்றுச் செயல்படுத்துவதே நல்லது. மதத் தலைவர்கள் விவாதங்களை நிறுத்தி விட்டு கைகோக்க வேண்டிய நேரம் இது.

_ கல்கி (24.10.2010) வார இதழில் வெளிவந்த கேள்வி _ பதில்தான் இது.
அயோத்தி தீர்ப்புக்குப்பிறகு பார்ப்பனர்கள் ரொம்பத்தான் அமைதி விரும்புபவர்கள் போலவும், சமரச சன்மார்க்க ஜீவிகள் போலவும் பேச _ எழுத ஆரம்பித்து விட்டனர். இந்தத் தீர்ப்பு வேறு வகையில் அமைந் திருக்குமேயானால் சங்பரிவார்க் கும்பல் நாட்டை எந்த அளவுக்கு ரத்தக் களரியாக்கியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வதற்கே அச்சமாக உள்ளது.
சரி.. அது ஒருபுறம் இருக்கட்டும். இதில் காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஏதோ காரியம் ஆற்றப் புறப்பட்டுள்ளாராமே.
அவருக்குச் சமுதாயத்தில் இன்றைய தினம் இருக்கிற யோக்கியதைக்கு இது போன்ற வேலைகளில் ஈடுபடும் தகுதி உள்ளவர்தானா? இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தலையிடுவதற்குக் குறைந்த பட்சம் தகுதியும், ஒழுக்கமும் தேவைப்படுமே!
கொலை வழக்கிலும், காமக் கிறுக்கிலும் சிக்குண்டு கதை நாறிப் போய்க் கிடக்கும் ஒரு ஆசாமி, ஏதோ பெரிய மனுஷாள் போலத் தம்மைக் காட்டிக்கொள்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் கருதப்பட முடியும்.
சமரசம் பேச விரும்புபவர் கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்க வேண்டும்; அதற்குரிய தகுதி உடையவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டாமா? தீர்ப்பு வந்தவுடன் என்ன சொன்னார்?
முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இதே ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்? அதை முஸ்லிம்களே விரும்ப மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு அயோத்தியில் ஏழு மசூதிகள் உள்ளன. அதனால் இன்னொரு மசூதியைக் கட்ட அவர்கள் விரும்பமாட்டார்கள். மேலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவை யில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும். அதனால் அந்த இடத்தில்தான் மசூதி கட்ட வேண்டும் என்ற அவசியம் முஸ்லிம் களுக்கு இல்லை (தினத்தந்தி 2.10.2010) இப்படிச் சொன்னவர்தான் இந்த ஜெயேந்திர சரஸ்வதி என்ற கொலை வழக்குக் குற்றவாளி!
முந்திரிக்கொட்டைத்தனமாக இப்படி உளறிக் கொட்டிவிட்டு, இஸ்லாம் வாரியத் தலைவரைப் பேச்சு நடத்திட மடத்துக்கு அழைக்கிறாராம்.
எப்படியிருக்கிறது? எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டுச் சொல்லாமல் இருந்தால் சரி, ஏதோ அழைக்கிறார் _ என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்ற மரியாதையாவது மிஞ்சும்.
நான் உமி கொண்டு வருகிறேன் _ நீ அரிசி கொண்டு வா, ஊதி ஊதித் தின்னலாம்! என்கிற மத்தியஸ்தத்தை எந்தக் கிறுக்கரால்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியும்.
அவர் ஒரு நடுநிலையாளர் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும்தானே இன்னொரு. தரப்பினர் அவரை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்?
அயோத்திப் பிரச்சினையில் இதற்கு முன்பும்கூட தலையிட்டு மூக்கு உடைபட்டு வந்தவர்தான் இவர்.

நீ சைவன் _ ஸ்மார்த்தன் _ நீ யார் எங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தில், ராமன் விஷயத்தில் தலையிட? என்று ராமஜென்மபூமி நியாஸ் தலைவர் மூக்கறுக்கவில்லையா? மூக்கறுபட்டு டில்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ஓடி வந்த கதையெல்லாம் ஏராளம் இருக்கின்றனவே!

பாபர் மசூதி இடிப்பு முடிந்து போன பிரச்சினை. அதைப்பற்றிப் பேசுவதோ, நினைவு நாளைக் கொண்டாடுவதோ தவறு. இப்பொழுது ராமர்தான் குடிசையில் வாழ்ந்து வருகிறார். குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு எப்படி அரசுஅந்த இடத்தைப் பட்டா போட்டுக் கொடுக்கிறதோ, அதேபோல் தற்போது குடிசையில் இருக்கும் ராம-ருக்கு அந்த இடத்தைக் கொடுப்பது-தான் நியாயம் (தினத்தந்தி 8.12.1999) என்று சொன்ன இந்த ஆசாமி இஸ்-லாம் வாரியத் தலைவரை சமரசப் பேச்சுக்கு அழைக்கிறாராம்.

இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது.

ராமன் என்றால் அடேயப்பா, எப்படி எப்படியெல்லாம் ஏற்றிப் போற்றுவார்கள்! அவரின் அம்பறாத் தூளியிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படி எப்படி எல்லாம் சென்று தாக்கும் என்று காகித அம்புகளை விடு வார்கள்.

அப்படிப்பட்ட ராமன்பற்றி ஜெயேந்திரர் எப்படி சொல்கிறார்? பாவம் ராமனாம் _ குடிசையில் வசிக்-கிறானாம். அரசு பார்த்து பட்டா கொடுக்க வேண்டிய ஏழையாம்! இதையே கலைஞர் சொல்லியிருந்தால் இந்தக் கூட்டம் கச்சையை இறுக்கிக் கட்டி சலாம்வரிசை ஆடியிருக்காதா? தங்-களுக்குக் காரியம் ஆக வேண்டு-மானால் காலைப் பிடித்துக் கெஞ்சத் தயங்காதவர்களாயிற்றே -_ அதனால்-தான் மகாவிஷ்ணுவின் அவதாரத்தை பாவம் ஏழைக் குடிசையில் கிடக்-கிறான், கொஞ்சம் கருணை காட்-டுங்கள் என்று காலைப் பிடிக்கிறார் சங்கராச்சாரியார்.

பாபர் மசூதி குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்ற பிரச்சினை வெடித்த-போது இதே ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்.

பாபர் மசூதி என்பது ஒரு கட்டடம். ஒரு கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கையாகாது, எனவே (தினமணி 27.11.2000) அவர்கள் பதவி விலகத் தேவையில்லை என்று சொல்லவில் லையா?

இந்த யோக்கிய சிகாமணிகள் சமரச வேலையில் ஈடுபடுகிறார்களாம் _ தூக்கி நிறுத்திப் பல்லக்கில் ஏற்றப் பார்க்கிறது கல்கி வகையறாக்கள்!

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைவிட கீழே போவதற்கு, தரம் கெட்டுப் போனதற்கு, மக்கள் மத்தியில் சவுங்கை கெட்டுப் போனதற்கு இன்னொருவர் இனி-மேல்தான் பிறக்க வேண்டும். இந்த நிலையிலும் கல்கி சோ கூட்டம் அவரைப் பெரியவாள் என்று குறிப்-பிடுவதும், ஒரு பெரிய சமாச்சாரத்தின் சமரசப் பணியில் ஈடுபடுகிறார் என்றும் பாவனை காட்டுவதுமான சாமர்த் தியத்தை கவனிக்க வேண்டும்.

பார்ப்பனீயம் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று சிலர் கேட்கிறார்களே _ இதற்குப் பெயர்தான் பல்லிளிக்கும் பார்ப்பனீயம் என்பது!
http://viduthalai.periyar.org.in/20101023/snews01.html